பக்கம் எண் :

மலரும் உள்ளம்51

அழுத பிள்ளை

அழுத பிள்ளை சிரிக்குமாம்.
       அம்மா வந்தால் குதிக்குமாம்.
கழுத்தைக் கட்டிக் கொள்ளுமாம்.
       "கலக"லென்று பேசுமாம்.

அரும்பு மலர்ந்து விரியுமாம்.
       அருணன் வரவே சிரிக்குமாம்.
விரும்பி அணியச் செய்யுமாம்.
       வீசி மணத்தைப் பரப்புமாம்.

மடியும் செடிகள் நிமிருமாம்.
       மழையைக் கண்டு தழைக்குமாம்.
அடியி லுள்ள வேர்களும்
       ஆழ மாகச் செல்லுமாம்.

படுத்த கன்று எழும்புமாம்.
       பசுவைக் கண்டு துள்ளுமாம்.
கொடுத்த பாலைச் சப்பியே,
       குடித்துக் குதித்து ஓடுமாம் !