பக்கம் எண் :

மலரும் உள்ளம்77

அன்பு

பட்டை போடப் போடத்தான்
       பளப ளக்கும் வைரமே.

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
       மினுமி னுக்கும் தங்கமே.

அரும்பு மலர மலரத்தான்
       அளிக்கும் மணத்தை மலருமே.

அன்பு பெருகப் பெருகத்தான்
       அமைதி அடையும் உலகமே.