பக்கம் எண் :

8மலரும் உள்ளம்

நாய்க்குட்டி

தோ... தோ... நாய்க்குட்டி.
துள்ளி வாவா நாய்க்குட்டி.

உன்னைத் தானே நாய்க்குட்டி.
ஓடி வாவா நாய்க்குட்டி.

கோபம் ஏனோ நாய்க்குட்டி ?
குதித்து வாவா நாய்க்குட்டி.

* * *

கழுத்தில் மணியைக் கட்டுவேன்;
கறியும் சோறும் போடுவேன்.

இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீட்டைக் காத்திடு!