பக்கம் எண் :

90மலரும் உள்ளம்

விந்தை

சூறைக் காற்று வந்தது;
       சுழன்று சுழன்று அடித்தது;
கூரை வீட்டைப் பிய்த்தது;
       குடியைக் கெடுத்துச் சென்றது!

பலத்த மழைதான் பெய்தது;
       பயிரை அழித்துச் சென்றது;
ஜலத்தி னாலே மக்களைத்
       தத்த ளிக்கச் செய்தது!

நெருப்பு எங்கோ பிடித்தது;
       நீண்டு பரவ லானது;
அருமை மிக்க பொருள்களை
       அழித்துப் பொசுக்கிச் சென்றது!

பூமி ஆட லானது.
       பிளவு நடுவே கண்டது.
ஆவி போக உயிர்களை
       அதிலே அழுந்தச் செய்தது!