விந்தை
சூறைக் காற்று வந்தது;
சுழன்று சுழன்று அடித்தது;
கூரை வீட்டைப் பிய்த்தது;
குடியைக் கெடுத்துச் சென்றது!
பலத்த மழைதான் பெய்தது;
பயிரை அழித்துச் சென்றது;
ஜலத்தி னாலே மக்களைத்
தத்த ளிக்கச் செய்தது!
நெருப்பு எங்கோ பிடித்தது;
நீண்டு பரவ லானது;
அருமை மிக்க பொருள்களை
அழித்துப் பொசுக்கிச் சென்றது!
பூமி ஆட லானது.
பிளவு நடுவே கண்டது.
ஆவி போக உயிர்களை
அதிலே அழுந்தச் செய்தது!
|