பாரத நாடு
மாதாவின் துவஜம்
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
(தாயுமானவர் ஆனந்தக்களிப்பு வர்ணமெட்டு)
பல்லவி
தாயின் மணிக்கொடி
பாரீர் -- அதைத் |
தாழ்ந்து
பணிந்து புகழ்ந்திட வாரீர் |
சரணங்கள்
1 |
ஓங்கி
வளர்ந்ததோர் கம்பம் |
அதன்
உச்சியின் மேல் வந்தே
மாதரம் என்றே |
பாங்கின்
எழுதித் திகழும் |
செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது
பாரீர்! (தாயின்) |
2 |
பட்டுத்
துகிலென லாமோ? |
அதில்
பாய்ந்து சுழற்றும்
பெரும்புயற் காற்று |
மட்டு
மிகுந்தடித் தாலும் |
அதை
மதியாதவ் வுறுதிகொள்
மாணிக்கப படலம். |
3 |
இந்திரன்
வச்சிரம்
ஓர்பால் |
அதில்
எங்கள் துருக்கர்
இளம்பிறை ஓர்பால் (தாய்) |
மந்திரம்
நடுவுறத்
தோன்றும் |
அதன்
மாண்பை வகுத்திட
வல்லவன் யானோ? |
4 |
கம்பத்தின்
கீழ்நிற்றல்
காணீர் |
எங்கும்
காணரும் வீரர்
பெருந்திருக் கூட்டம் |
நம்பற்
குரியர்அவ் வீரர் |
தங்கள்
நல்லுயிர் ஈந்தும்
கொடியினைக் காப்பார். |
5 |
அணியணி
யாயவர்
நிற்கும் |
இந்த
ஆரியக் காட்சியோர்
ஆனந்தம் அன்றோ? |
பணிகள்
பொருந்திய
மார்பும் |
விறல்
பைந்திரு வோங்கும்
வடிவமும் காணீர்! |
6 |
செந்தமிழ்
நாட்டுப்
பொருநர் |
கொடுந்
தீக்கண் மறவர்கள்,
சேரன்றன் வீரர் |
சிந்தை
துணிந்த தெலுங்கர் |
தாயின்
சேவடிக் கேபணி செய்திடு
துளுவர், |
7 |
கன்னடர்
ஒட்டிய ரோடு் |
போரில்
காலனும் அஞ்சக்
கலக்கும் மராட்டர். |
பொன்னகர்த்
தேவர்க
ளொப்ப |
நிற்கும்
பொற்புடையார் இந்து
ஸ்தானத்து மல்லர், |
8 |
பூதலம்
முற்றிடும்,
வரையும் |
அறப்
போர்விறல் யாவும்
மறப்புறும் வரையும் |
சிந்தை
துணிந்த
தெலுங்கர் |
பாரில்
மறைவரும் கீர்த்திகொள்
ரஜபுத்ர வீரர், |
9 |
பஞ்ச
நதத்துப்
பிறந்தோர் |
முன்னைப்
பார்த்தன் முதற்பலர்
வாழ்ந்தநன் னாட்டார், |
துஞ்சும்
பொழுதினும
தாயின் |
பதத்
தொண்டு நினைந்திடும்
வங்கத்தி னோரும்,, |
10 |
சேர்ந்ததைக்
காப்பது
காணீர் |
அவர்
சிந்தையின் வீரம்
நிரந்தரம் வாழ்க! |
தேர்ந்தவர்
போற்றும்
பரத |
நிலத் தேவி துவஜம் சிறப்புற
வாழ்க! (தாயின்) |
|
|
|
|