|
தேசிய
இயக்கப் பாடல்கள்
சத்ரபதி சிவாஜி
|
தன் சைனியத்திற்குக் கூறியது
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! |
5 |
அதிரத மன்னர்காள்!
துரகதத் ததிபர்காள்!
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
காலனுருக் கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச |
10 |
செற்றடுந்
திறனுடைத் தீர ரத்தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததிவ் வரும்புகழ் நாடு!
|
15 |
வேதநூல் பழிக்கும் வெளித்திசை
மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்தபேர ரசரும்
|
20 |
நிர்மல முனிவரும் நிறைந்தநன்
னாடு!
வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! |
|
\பு{[குறிப்பு]:
பாடலின் போக்கைக் கவனிக்குமிடத்து, இது
ர்த்தியாகவில்லை யென்றும், இறுதியில் இன்னுஞ் சிலவரிகள்
இருந்திருக்கலாமோ வென்றும் கருதவேண்டியுளது என்ற குறிப்பு
1937 ஆம் வருடப் பதிப்பில் காணப்படுகிறது.} |
பாரதப் பூமி
பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!
|
25 |
பாரத நாடு
பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும் |
30 |
ஏனைய திசைகளில்
இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
|
35 |
பைந்நிறப்
பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு!
தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி! |
40 |
வானவர் விழையும்
மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
|
45 |
ஞானமும் அறியா
நவைபுரி பகைவர்,
வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
|
50 |
மாதர்கற்
பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!
சாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்!
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்: |
55 |
கண்ணியம்
மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;
பொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்;
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்; |
60 |
வீரியம்
அழிந்து மேன்மையும் ஒழிந்துநம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குள்தான் தோன்றி முடிவது போல |
65 |
மக்களாய்ப்
பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? |
70 |
தாய்பிறன்
கைபடச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?
பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்;
புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு |
75 |
அன்பிலா திருப்போன் ஆரிய
னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
|
80 |
படைமுகத்து இறந்து பதம்பெற
விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!
சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
|
85 |
வீடுசென் றொளிக்க விரும்புவோன்
விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்
பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!
|
90 |
ஆணுருக் கொண்ட பெண்களும்
அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.
ஆரியர் இருமின்! ஆண்கள் இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
|
95 |
ஈனமே பொறாத இயல்பினர்
இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
|
100 |
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர்
இருமின்!
சோர நெஞ்சிலாத்தூ யவர் இருமின்!
தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
|
105 |
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர்
உதவுமின்!
வம்மினோ துணைவீர்! மருட்சிகொள் ளாதீர்!
நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
|
110 |
இன்னருள் நமக்கோர் இருந்துணை
யாகும்.
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்; வானக நாடுறும்;
|
115 |
பற்றறு முனிவரும்
ஆசிகள் பகர்வர்
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்.
செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
|
120 |
வாளுடை முனையினும், வயந்திகழ்
சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்
உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம்இதம் பெருவளம் நலிந்திட விரும்பும்
|
125 |
வன்மியை வேரறத் தொலைத்தபின்
னன்றோ
ஆணெனப் பெறுவோம்! அன்றிநாம் இறப்பினும்
வானுறு தேவர் மணியுல கடைவோம்!
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
|
130 |
போரெனில் இதுபோற் புண்ணியத்
திருப்போர்
பாரினில் ஒன்று பார்த்திடற் கெளிதோ?
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவதை விரும்புவார் சிலரே;
நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து
|
135 |
வஞ்சக மழிக்கும் மாமகம்
புரிவம்யாம்.
வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை;
தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை,
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
|
140 |
மாதுலர் சோதரர் மைத்துனர்
தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
இன்னவர் இருத்தல்கண்டு இதயம் நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
“ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
|
145 |
வையகத் தரசும்
வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்;
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;
|
150 |
வாயுலர் கின்றது; மனம்பதைக்
கின்றது;
ஓய்வுறுங் கால்கள்; உலைந்தது சிரமும்;
வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன்;
சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்;
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்.
|
155 |
சினையறுத் திட்டபின் செய்வதோ
ஆட்சி?”
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து
சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
|
160 |
வில்லெறிந் திருந்த வீரனை
நோக்கி,
“புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்.
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்.
உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
|
165 |
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற்
கின்றாய்.
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் -- இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதர ராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
|
170 |
ஆரிய! நீதிநீ அறிகிலை
போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை.
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
|
175 |
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ
எழுக!”
என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்
அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
|
180 |
சுற்றமும் நோக்கான் தோழமை
மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிடை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில
இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை யாற்றலர்,
|
185 |
தேரில், இந் நாட்டினர்,
செறிவுடை உறவினர்;
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்,
பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்,
சிறப்புடை யாரியச் சீர்மையை யறியார்.
|
190 |