தோத்திரப் பாடல்கள்
முருகக் கடவுள்மீது கிளித் தூது
பல்லவி
|
சொல்ல வல்லா
யோ? -- கிளியே
சொல்ல நீ வல்லாயோ? |
அனுபல்லவி
|
வல்ல வேல் முருகன்
-- தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று |
(சொல்ல) |
சரணங்கள்
|
தில்லை யம்பலத்தே
-- நடனம்
செய்யும் அமரர்பிரான் -- அவன்
செல்வத் திருமகனை -- இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று |
(சொல்ல) |
1 |
அல்லிக் குளத்தருகே
-- ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே -- அங்கொர்
முல்லைச் செடியதன்பாற் -- செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று |
(சொல்ல) |
2 |
பாலை வனத்திடையே -- தனைக்கைப்
பற்றி நடக்கையிலே -- தன்னகை
வேலின் மிசையாணை -- வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று |
(சொல்ல) |
3 |
‘குருவெற்பு’
என்பது திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள
சுப்பிரமணிய க்ஷேத்திரமாகிய ‘குரு மலை’ என்னும்
ஊராகும்.
‘நின் சேவகம்’ என்பதற்குப் பதிலாகத் ‘திருப்புகழ்’ என்றும்
ஒரு பாடம் உண்டு. |