பக்கம் எண் :

பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்


சுயசரிதை

நிவேதிதா தேவி

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
  கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
  டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
  பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய
  தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.