காவியங்கள்
: கற்பனையும் கதையும்
|
|
[ராகம் - சங்கராபரணம்]
[ தாளம் - ஏகதாளம்]
ஸ்வரம் :- ஸகா-ரிமா-காரீ
பாபா பாபா - மாமா மாமா
ரீகா - ரிகமா - மாமா
|
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். |
(காதல்) |
1 |
இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம்.
|
(காதல்) |
2 |
நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம்.
|
(காதல்) |
3 |
தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்
கூளம், கூளம், கூளம்.
|
(காதல்) |
4 |
பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,
மண்ணே, மண்ணே, மண்ணே. |
(காதல்) |
5 |
புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்
இகழே, இகழே, இகழே.
|
(காதல்) |
6 |
உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. |
(காதல்) |
7 |
கூடல், கூடல், கூடல்;
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல்.
|
(காதல்) |
8 |
குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங் காலை,
விழலே, விழலே, விழலே. |
(காதல்) |
9 |
|
|
|