தோத்திரப் பாடல்கள்
ஆறு துணை
|
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
-- பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி -- ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
|
|
|
கணபதி ராயன் -- அவனிரு
காலைப் பிடித் திடுவோம்
குணமுயர்ந் திடவே -- விடுதலை
கூடி மகிழ்ந் திடவே
|
(ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்) |
1 |
சொல்லுக் கடங்காவே -- பராசக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் -- பராசக்தி
வாழி யென்றே துதிப்போம். |
(ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்) |
2 |
வெற்றி வடிவேலன் -- அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில் லாதேபோ! -- பகையே!
துள்ளி வருகுதுவேல். |
(ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்) |
3 |
தாமரைப் பூவினிலே -- சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே -- கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். |
(ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்) |
4 |
பாம்புத் தலைமேலே -- நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ் வோம்
மாம்பழ வாயினிலே -- குழலிடஞ
வண்மை புகழ்ந்திடுவோம். |
(ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்) |
5 |
செல்வத் திருமகளைத் -- திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்.
செல்வ மெல்லாந் தருவாள் -- நமதொளி
திக்க னைத்தும் பரவும். |
(ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்) |
6 |