தோத்திரப் பாடல்கள்
கண்ணம்மா (1)
|
பல்லவி
|
பீடத்தி லேறிக்
கொண்டாள் -- மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.
|
சரணங்கள்
|
நாடித்
தவம் புரிந்து -- பீடுற்ற முனிவரர்
கேடற்ற
தென்று கண்டு -- கூடக் கருது மொளி
மாடத்தி
லேறி ஞானக் -- கூடத்தில் விளையாடி
ஓடத்
திரிந்து கன்னி -- வேடத்தில் ரதியைப்போல்
ஈடற்ற
கற்பனைகள் -- காடுற்ற சிந்தனைகள்
மூடிக்
கிடக்கு நெஞ்சின் -- ஊடுற்றதை யமரர்
தேடித்
தவிக்கு மின்ப -- வீடொத் தினிமைசெய்து
வேடத்தில்
சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா |
(பீடத்தி) |
1 |
கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ?
விண்ணவர்
தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச்
சிவனுடலை -- நாடுமவ ளென்கோ?
எண்ணத்
திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி
லரசியிவள் -- பெரிய எழிலுடையாள்
கண்ணுள்
மணியெனக்குக் -- காத லிரதியிவள்
பண்ணி
லினியசுவை -- பரந்த பொழியினாள்
உண்ணு
மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா |
(பீடத்தி) |
2 |