முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
காவியங்கள் : கற்பனையும் கதையும்
சகாதேவனைப் பந்தயம் கூறுதல்
வேறு
எப்பொழு தும்பிர மத்திலே -- சிந்தை
ஏற்றி உலகமொ ராடல்போல் -- எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் -- வகை
தானுணர்ந் தான்ஸக தேவனாம் -- எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் -- வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -- அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் -- அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான்.
25
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்