தோத்திரப் பாடல்கள்
வெண்ணிலா
|
[வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய பிரகாசத்தையன்று,
சந்திரனையே
குறிப்பது.]
|
எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே -- விழிக்
கின்ப
மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே.
சொல்லையும்
கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே-- நின்றன்
சோதி
மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே.
நல்ல
ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே (இந்த)
நனவை
மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே.
கொல்லும்
அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே-- வந்து
கூடியிருக்குது
நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே. |
1 |
மாதர் முகத்தை நினைக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே -- அஃது
வயதிற்
கவலையின் நாவிற் கெடுவது
வெண்ணிலாவே.
காத
லொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே -- அந்தக்
காமன்றன்
வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே.
மீதெழும் அன்பின் விளைபுன் னகையினள்
வெண்ணிலாவே -- முத்தம்
வேண்டிமுன்
காட்டு முகத்தின் எழிலிங்கு
வெண்ணிலாவே.
சாதல்
அழித அலாது நிரந்தரம்
வெண்ணிலாவே -- நின்
தண்முகந்
தன்னில் விளங்குவ தென்னைகொல்
வெண்ணிலாவே. |
2 |
நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே -- நன்கு
நீயும்
அமுது அழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே.
மன்னு
பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே -- அந்த
மாயன்
அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே.
துன்னிய
நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே -- இங்கு
தோன்று
முலகவே ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே.
பின்னிய
மேகச் சடையுமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே
பெட்புற
நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே.
|
3 |
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே -- நினைக்
காதல்செய்
வார்நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே.
சீத
மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே -- வண
தேசு
மிகுந்தவெண் டாமரை போன்றனை
வெண்ணிலாவே.
மோத
வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே -- நீ
முத்தி
னொளிதத் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே.
தீது
புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே -- நலஞி
செய்தொளி
நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே. |
4 |
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே -- உன்றன
மேனி
யழகு மிகைப்படக் காணுது
வெண்ணிலாவே.
நல்லிய
லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே -- மூடு
நற்றிரை
மேனி நயமிக்க காட்டிடும்,
வெண்ணிலாவே.
சொல்லிய
வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலாவே -- நின்
சோதி
வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே.
புல்லியன்
செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே -- இருள்
போகிடச்
செய்து நினதெழில் காட்டுதி,
வெண்ணிலாவே.
|
5 |