பல்வகைப் பாடல்கள்
|
வள்ளிப் பாட்டு (1)
|
பல்லவி
|
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ,
குற வள்ளி! சிறு கள்ளீ! |
|
(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி - நின்றன்
வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே
அன்பு சூடி - நெஞ்சம
ஆரத் தழுவி அமர நிலைபெற் றதன்
பயனை யின்று காண்பேன். |
1 |
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து பொழிவது கண்டாய் - ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு - நின்றன
பிள்ளைக் கிளிமென் குதலையிலே மனம்
பின்ன மறச்செல்ல விட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ் செல்வ மே!
நினைச்
சேர விரும்பினன், கண்டாய்! |
2 |
வட்டங்க ளிட்டுங் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே -
நினை
விட்டுவிட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி
-
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை இரவியைப்
போன்ற முகத்தாய்! முத்தம்இட்டுப்
பல - முத்த
மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச்
சேர்ந்திட வந்தேன். |
3 |