தோத்திரப்
பாடல்கள்
தேச முத்துமாரி
|
தேடியுனைச் சரணடைந்தேன்,
தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய்,
கேட்டவரந் தருவாய்.
|
1 |
பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய்,
குறைகளெல்லாம் தீர்ப்பாய்.
|
2
|
எப்பொழுதும் கவலையிலே
இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன்
உனதருளால் வாழ்வேன்.
|
3 |
சக்தியென்று நேரமெல்லாந்
தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால்
பயமனைத்துந் தீரும். |
4 |
ஆதாரம் சக்தியென்றே
அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;
யாதுமவள் தொழிலாம்.
|
5 |
துன்பமே இயற்கையெனும்
சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள்.
|
6 |
நம்பினார் கெடுவதில்லை;
நான்கு மறைத் தீர்ப்பு ;
அம்பிகையைச் சரண்புகுந்தால்
அதிகவரம் பெறலாம். |
7 |
[பாட
பேதம்]: நான்மறையின் தீர்ப்பு -- பாரதிதாசன்.
|
|