தோத்திரப்
பாடல்கள்
சிவ சக்தி புகழ்
[ராகம் -- தன்யாசி] [தாளம் -- சதுஸ்ர
ஏகம்]
|
ஓம் சக்திசக்தி சக்தியென்று சொல்லு -- கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு
சக்திசக்தி சக்தியென்று சொல்லி -- அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு. |
1 |
ஓம் சக்திமிசை பாடல்பல பாடு -- ஓம்
சக்திசக்தி என்றுதாளம் போடு
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே -- சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு. |
2
|
ஓம் சக்திதனையே சரணங் கொள்ளு -- என்றும்
சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு
சக்திபுக ழாமமுதை அள்ளு -- மதி
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.
|
3
|
ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு -- நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி -- அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.
|
4
|
ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -- இதைச்
சார்ந்துநிற்ப தேநமக்கொ ருய்கை
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை -- அதில்
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை. |
5 |
ஓம், சக்திசக்தி சக்தியென்று நாட்டு -- சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் -- புவிச்
சாதிகளெல் லாமதனைக் கேட்டு. |
6 |
ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு -- அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு
சக்தியருள் கூடிவிடு மாயின் -- உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.
|
7
|
ஓம் சக்திசெயுந் தொழில்களை எண்ணு -- நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு
சக்திதனை யேயிழந்து விட்டால் -- இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு.
|
8
|
ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு -- ஒரு
சங்கடம் வந்தாலிரண்டு கூறு
சக்திசில சோதனைகள் செய்தால் -- அவள்
தண்ணருளென் றேமனது தேறு. |
9 |
ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து -- சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய் -- சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து.
|
10
|