வேதாந்தப்
பாடல்கள் |
மாயையைப் பழித்தல்
|
[ராகம்
-- காம்போதி] [தாளம் -- ஆதி]
|
உண்மை யறிந்தவர் உன்னைக்
கணிப்பாரோ
மாயையே -- மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ --
மாயையே. |
1 |
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே -- நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ --
மாயையே. |
2 |
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட
மாயையே -- நான்
உன்னைக் கெடுப்ப துறுதிஎயன் றேயுணர்
மாயையே. |
3 |
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே -- இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்செய்வாய் --
மாயையே. |
4 |
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப
மாயையே -- தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ --
மாயையே. |
5 |
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே -- சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை --
மாயையே. |
6 |
என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன்
மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்வராது காண்-
மாயையே. |
7 |
யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன்
மாயையே -- உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன் உன்னை --
மாயையே. |
8 |