ஆண் குழந்தையைத் தாலாட்டல்.
சர்வ சாதாரணமாகப்
பெண்டிர் தாலாட்டுப்பாடும் மெட்டு.
ஆராரோ - ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ
வீரமகனே வேலவனே, விண்ணவர்கள்
கோரும் உரிமை கொடுக்கவரும் ஆணழகே!
நீலவிழிகள்!
நிலவுமுகம்! தாமரை வாய்!
கோலும் உதடு
கொட்டுதமிழின் அரும்பு
வேளைக்கு வேளை விறல்வளரும்
பாரதனே,
நாளைய வெற்றி இன்றலரும்
நாட்டானே!
அமுதமுகைகுப் பாரதத்தாய் அன்பெல்லாம்
சமர்விளைக்க வந்த தமிழா
இளங்குமரா,
இன்பம் உனக்குப் பாரதப்போர்
ஏற்பதிலே,
அன்று முடிபூண்ட ஆரியனே
வேல் *மறவா
பொம்மை
உனக்குப் பொன்விழுங்கும்
பூதங்கள்
வெம்மைக் பகையுனது வேலுக்கிலக்கியமாம்.
நல்ல இமயமலை நாடிவரும் கங்கைநதி;
வெல்லத் தமிழ்பிறந்த
மேன்மைப் பொதியமலை,
வைகை, யமுனை, வளங்கொழிக்கும்
பெண்ணை நதி
பொய்கை, மலர்ச்சோலை பூணுகின்ற பாரதனே,
வில்மறவர், வேல்மறவர், *வெற்பொத்ததோள் மறவர்.
பன்னு தமிழ்நாட்டுப் பலவீரர் பார்த்திருக்கச்
செல்வம் பறிபோதல் எண்ணிச் சிரித்தாயே!
''வெல்வம'' என்று நீதான் விழிதுயில்வாய் பாரதனே
வீரியத்தைக் காட்டும் புலி்போல்
விழிதுயில்வாய்
ஆரியர்கள் நாட்டின் அனலே விழி
துயில்வாய்
*மறவன் - விரன்
பெண்குழந்தையைத் தாலாட்டுதல்
தீராத ஆசையெல்லாம் தீர்க்கவந்த பெண்ணரசி!
வாராத செல்வமெல்லாம் வந்துதரும்
தெய்வீகமே!
தாமரையின் வாய்திறந்தால் சாதிசனம்
வாய்திறக்கும்
சாமத்திலும் பிரியாத்
தாய்நாடு வாய்திறக்கும்
ஒத்திருக்கும் உன்சமுகம் ஊமையரென்
றெண்ணாதே.
மொய்த்திருக்கும் உன்சமுகம் முப்பத்து முக்கோடி-!
ஏதோ உனதுகுறை ஏந்திவரும்
கட்டழகே!
போதேநீ கண்ணுறங்கு பொன்னான
தொட்டிலிலே
அங்கம் பதைத்தே
அசத்தியத்தைக் கொன்றிடுவார்
வங்கத்து வீரருன்றன்
வாழ்க்கையிலே சம்பந்தி,
தேசத் துருக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன்மார்
மீசைத் தெலுங்கர்களும் வில்லர்களும்
மைத்துனர்களும்
அமிழ்தக் கவிகள்
அம்புலிக்குச் சொல்லிவைத்த
தமிழ்நாட்டு வீரரெலாம் சண்பகமே,
சொந்த்தார்.
நாட்டுக்கு நூலிழைக்கும் நங்கையருன்
அக்கையர்கள்,
வீட்டில் துணிநெய்யும் வீரருன்றன் அம்மாக்கள்,
கன்னியா குமரிமுதல் கங்கைஇமயம்
வரைக்கும்
உன்னிரத்தம் சேர்ந்த உடம்புடையார்
பாரதத்தார்
ஆசைதவிர்த்ததுண்டோ ஆரியத்துப்
பெண்ணுனக்கு
நேசம் குறைந்ததுண்டோ நீதரெலாம்
வாழ்நாட்டில்.
கூட்டத்தில் வாழும் மயில் கோலம் குறைந்ததுண்டே?
நாட்டின் குலவிளக்கே
நாயகமே கண்ணுறங்கு.
தேச முனக்குத்
திரவியங்கள் உன்னுடைமை
யாசகமாய் வந்தவரைப் ''போ''
என்றால் ஏனிருப்பார?
சந்தனக் காடு
தவமலைகள் உன்னுடைமை
சிந்துநதி கங்கைநதி தித்திக்கும் பாற்குளங்கள்
யாவும் உனக்கே
இளைய பெருமாட்டி!
தாவும் பொடிவாசச்
சோலைகளும் உன்னுடைமை.
பாடப் பழங்கவிகள்
பல்கோடி உன்னருகே
தேடிப்பிடிப்ப தில்லை
சிந்தைமகிழ் காவியங்கள்
நாலு மறைகள், நவில் ஆறு, சாத்திரங்கள்
மூல தருமம்,
முடிவில்லாக் கைத்தொழில்கள்
உடைமை சிறந்ததுண்டாம்
உன்னுடைய பாரதத்தில்
படையிற் சிறந்தவராம்
பாரதத்தாய் பெற்றமக்கள்
கோயில், மணிவீடு,
கொடட்டிகள், சத்திரங்கள்,
வாயிலிலே பொன்சிந்தும் மாளிகைகள் கோடியுண்டு
நெல்லும் மணிவகையும் நின்
நாட்டில் வேண்டுமட்டும்
வெல்ல கரும்பும் விளைவதுண்டாம்
உன்நாட்டில்
எத்தாற் குனறச்சல்
எவ்விதத்தால் தாழ்வுனக்கு?
தித்திக்கும் கற்கண்டே
தேசமுத்தே கண்வளராய். |
( 35)
( 40)
( 45)
( 50)
( 55)
( 60)
( 75)
( 80)
( 85)
( 90)
( 95)
(100)
( 105)
|