எட்டிஇருந் திட்டபல சேரிமக்கள்
இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச்
சென்றே
இட்டகனல் வெப்பத்தால் தோழிமாரே,
என்நெஞ்சு வெந்ததுண்டு தோழிமாரே,
மட்டற்ற நாவறட்சி தோழிமாரே,
வாட்டுவதால் நீர்கொடுப்பீர்
தோழிமாரே,
எட்டுணையும் மறுப்பீரோ தோழிமாரே,
என்றுநடு வீதியிலே கூவி நின்றாள்.
சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து
சேதிதெரிந் திடநினைத்த சேரி
மக்கள்
ஓரொருவ ராய்வந்தார் வெளியில்; 'அம்மா
உற்றதென்ன உந்தமக்கே? உரைக்க
வேண்டும்.
நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்;
நிலவில்லை; இந்தஇருள் தன்னில்
வந்தே,
கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக்
கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்'
என்றார்.
'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச்
சிறுதடுக்கும் இட்டு, நீர் குடிக்கத்
தந்த
பெரியீரே, என் அருமைத் தோழிமாரே
பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம்
தெருவினிலே கண்டீரே இரங்கினீரோ!
செயும்உதவி செய்தீரோ? மக்கள்
கூட்டம்
ஒருமுனையிற் பெற்றதீ, முழுதும் தீர்க்கும்;
என்னுமோர் உண்மையினை மறக்கலாமோ?
குளக்கரையின் சிறிதளவு குளத்த சைவே
கொல்புலியால் ஒருவன்இடர், பலர்க்கும்
அன்றோ?
இளக்காரம் தாராமல், தீமை ஒன்றை
இயற்றியோ ரைஊரார் எதிர்க்க
வேண்டும்.
களாப்புதரும் தன்னகத்தே இடங்கொடுத்தால்
கவ்விவிடும் வேரினையே காட்டுப்
பன்றி!
விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை
வெளியானைக் கொட்டும் தேனீக்கள்
வாழும்!
சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே,
துணைவருக்குச் சிப்பாயின், உத்தி,
யோகம்
உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே,
ஒளித்துவைத்தான் எனைவிட்டுப்
பிரித்து வைத்தான்
இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை
எடுத்தாள எண்ணமிட்டான் சூழ்ச்சியெல்லாம்
புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப்
பொசுக்கினான் நான்கலங்கிப் போவேனென்று.
தீஎரியும் நேரத்தில், தீமை வந்து
சீறுகின்ற நேரத்தில், எனைஇ ழுத்துப்
போய், அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை!
புதைத்திருந்தேன் என்இடையில்
குத்துக் கத்தி
தோயுமடா உன்மார்பில் என்று காட்டித்,
?தொலையில்போ! என்றேன்நான்!
சென்றான் அன்னோன்
நாய்குலைக்க நத்தம்பாழாமோ சொல்வீர்
நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச்
சொன்னேன்.
உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை
உட்புறத்தை நான்அடைய வேண்டும்
அங்கே
துயரத்தில் ஆழ்த்தப்பட் டிருக்கின் றாரா?
துயரின்றி இருக்கின்றாரா துணைவர்?
முயல்வதே என்கடமை உளவு தன்னை
மொழிவதுதான் நீங்கள்செய்யும்
உதவி? என்றாள்.
துயரோடு வந்திட்ட எம்பிராட்டி
தூங்கிடுக விடியட்டும்? என்றார்
அன்னோர்.
கண்மூட வழியிலையே! விடியு மட்டும்
காத்திருக்க உயிரேது? தோழி மாரே,
விண்மூடும் இருட்டென்றும், பகல்தா னென்றும்
வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே?
மண்மூடி வைத்துள்ள புதுமையைப்போல்
மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி!
இந்தப்
பெண்மூடி வைத்திடவோ என்உணர்வை?
பெயர்கின்றேன் வழியுரைப்பீர்
பெரியீர் என்றாள்.
கையோடு கூட்டிப்போய்க் காட்டுகின்றோம்
காலையிலே ஆகட்டும்; இரவில் போனால்
செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன்றாது;
சிப்பாய்கள் நம்மீதில் ஐயம்
கொள்வார்.
மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள
வீட்டையோ கோட்டையையோ அறிவதெங்கே
ஐயாவைக் காணுவதும் முடியாதென்றார்
அரிதான மாண்புடையாள் சரிதான்
என்றாள்.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
|