பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 51


(சுட்டுத்தள்ள மன்னன் ஆணை)

(அகவல்)

சில்லி மன்ன னிடத்திற் சென்று
"விநோதை வாழ்வு வீணாகின்றது.
கழுதை ஒன்று கடிதில் கொணர
ஆள்தேடு கின்றாள். அரசே!" என்றான்.
"விளங்க வில்லை விரித்துரை" என்றே
அரசன் கூற, அறைவான் சில்லி;
"சேந்தன் வீட்டில் திருமண விழாவை
நடத்துவேன்; நடத்த முடியா தாயின்
கழுதைமே லேறிக் கடிநகர் சுற்றி,
என்னுடல் நரிகள் தின்ன மாய்வேன்?
என்று சூளுரை இயம்பினாள் அன்றோ?

சேந்தன் இல்லம் சென்ற முரசும்
பிறவும் பகைவரால் மறுக்கப் பட்டன.
மணவிழா நடக்க வழியே இல்லை.
ஆதலால் உயிர்விட அவள் முயல்கின்றாள்!'
என்றான். மன்னன் எழுந்தான், பதைத்தே!
".எங்கே வல்லான்? எங்கே அமைச்சன்?"
என்று கூச்சல் இட்டான்! வத்தனர்.
"சேந்தன் வீட்டில் சேர்ந்த தீயரைச்
சுட்டுத் தள்ளச் சொன்னேன்; செய்க!
எனப் பணித்து, விநோதை இருப்பிடம்
ஓடினான். ஒண்டொடி கட்டிலில் கிடத்தல்
கண்டு, செய்தி கழறினான்! விநோதை.
"சேந்தன் வீட்டில் தீயர்
மாய்ந்தால் வாழ்வேன என்று சென்றாளே!









( 5 )




( 10 )





( 15 )




( 20 )




( 25 )

பிரிவு -- 52

(மக்கள் எதிரப்பு.)

அறுசீர் விருத்தம்

"கால்மணி நேரத் திற்குள்.
சேந்தனின் வீடு காக்கும்
நோன்பினர் விடிக. நோன்பை
இல்லையேல் படையால் மாய்க.
கோன்தந்த ஆணை இஃதே!
என்னுமோர் கொடிய அஞ்சல்
மேன்மைசேர் வேலன் கையில்
தந்தானோர் வேலைக் காரன்.

நடுநகர் மதிலை நோக்கி
நடந்தனன் வேலன்! அந்த
நெடுமதில் தலையில் ஏறி
நின்றனன்; குறுதி தோய்ந்த
கொடியினை வீச லானான்;
கூறுவான்; "சேந்த னாரின்
உடலினை எரித்த வீட்டில்
உவப்புறும் விழாச்செய் வாராம்.

"மறுத்தனம்; எம்மை மாய்க்க
மறவர்வள் வருதல் கேட்டோம்.
உறைகின்றீர் வீட்டி னுள்ளே
வாரீரோ, உறவி னோரே!
அறிவிலான் அறத்தைக் கொன்றான்.
அயலாரின் அடிவீழ்ந் தான்! ஆம்
முறைசெய்யா மன்னன் ஆடசி
முடித்திட வாரீர்!" என்றான்.
மாநகர்ப் பலபாங் குள்ள்
மக்கள்வந் தார்கள். " மன்னன்.
தீநகர் எண்ணம் வீழ்க;
திடுநாடு வாழ்க!" என்று
வானுற முழக்கஞ் செய்தார்.
"மக்களை மதியா தான்கீழ்
ஏனின்னும் பொறுமை? வாழ்வோம்.
அன்றிதாம் இறப்போம்." என்றார்.

"குண்டென்னும் கருவி கொண்டு
கொக்வதே மக்க ளுக்கென்
தொண்டென் னும் ஆட்சியாளன்
தொலையவும் ஒருகுண் டோராள்
உண்டென்னும் உண்மை தன்னை
உணர்கிலான் இற்றை நாளைப்
பண்டென்று நனைத்தான். செங்காய்
பழுக்காதென் றெண்ணு கில்லான்

"நீர்மட்டம் இமய மாக
நிமிர்ந்தது நீணி லத்தில்
ஓர்நாற்பத் தொன்பான் நாடும்
ஒழிந்தன நீரால் என்றால்,
யார்மட்டம்? எவரு யர்வு்
நிலைத்திடும்? ஆள வந்தான்
பேர்மட்டும்? நிலையோ? வீசும்
பெருங்காற்றில் சிறுதுரும்பாம்!'

என்றனர் -- மீண்டும் வேலன்
இயம்புவான்; "கால்ம ணிக்குள்
கொன்றிடும் கூட்டம் இன்னும்
கொன்றிட வாரீர்!'' என்றே
வரவில்லை: நாமே சென்று,
கூவிடு வோமே" என்றான்.
"நன்றென்றார மக்கள் யாரும்
நடந்தனர் படை வீட்டுக்கே!"









( 30 )





( 35 )




( 40 )





( 45 )




( 50 )




( 55 )





( 60 )




( 65 )





( 70 )





( 75 )




( 80 )

பிரிவு -- 53

(மக்கள் படை அடக்கப்பட்டது)

(எண்சீர் விருத்தம்)

வல்லானைப் படைவீட்டில் விநோதை கண்டு
"வாரீரோ படைகூட்டி!" என்று கேட்டாள்.
வல்லானும் படைவீட்டின் தலைவன் தன்னை
"வாரீரோ படைவீட்டைத்திறக்க! ' என்றான்.

நல்லதொரு படைவீட்டின் தலைவன், இங்கு
நல்லநல்ல துப்பாக்கி, நச்சுக் குண்டு,
வில்வேல்வாள் உண்டெனினும், சாவி இல்லை,
வீரரெலாம் காத்திருக்க வேண்டும் என்றான்."

படைவீடு திறப்பானை நேரிற் கண்டு
"படைவீரர் காத்திருக்க நீஏன் இந்தத்
தடைபோட்டு நீற்கின்றாய்?" என்று கேட்க
"பத்துமணி முன்கூட்டி மன்னர் ஆணை
இடவேண்டும். இடவில்லை" என்றான் ஆங்கே
ஏழாயிரம் பேர்கள் நாட்டு மக்கள்
தடதடென்று வருவதையும் விநோதை கண்டாள்.
தனித்துமயில் நடந்திட்டாள், வண்டி ஏறி

படைவீட்டைச் சூழ்ந்துநின்ற வெறுங்கை வீரர்
பத்தா யிரம்பேரும் கேட்கும் வண்ணம்
நடைபோட்டு வந்தஏ ழாயி ரத்தார்
நடுவினிலே கையுயர்த்தி வேலன் சொல்வான்:
"படைஏந்தும் மறவர்களே! இந்நா ட்டன்பீர்!
பழந்தமிழர் வழிவந்தீர்! உடன்பி றந்தீர்
அடைகாத்த தாய்ப்பறவை செத்த காட்டில்
ஆடலுண்டோ பாடலுண்டோ குஞ்சு கட்கே?

"தாய்நாட்டைத் தன்னடிக்கீழ் ஆக்கு தற்கே
அயல்நாட்டார் தாம்விட்ட தைய லாளைப்
போய்நாட்டில் அழைத்துவந்த பொல்லா வேந்தன்
பேக்கினுக்குப் புதுவாழ்வைப் பெற்ற தான்
தூய்நாட்டைக் காணுமோர் திட்ட மிட்ட
தூயானை, நமக்குற்ற தலைவன் தன்னை
வாய்த்துடுக்கு மன்னவனே சாகச் சொன்னான்.
மறநாட்டார் அதுகேட்டும் வாழு கின்றோம்!

"நாட்டுமக்கள் உள்ளமெலாம் வீற்றி ருந்த்
நல்லானைக் கொல்லவந்தாள், நாட்டு மக்கள்
கூட்டத்தைக் கொல்லவந்தாள் அன்றோ? அந்தக்
கொடியவளை ஆள்பவளாய்க் கொள்ள லாமோ?
பாட்டாளி மக்களெலாம் பதைபதைக்கப்
படுகொலையே நல்லதெனச் சொன்ன வண்ணம்
தோட்டத்தில் கனல்வளர்த்து வீழ்ந்தான் சேந்தன்.
தூயவனை நாமிழந்து துடிக்கும் போதில்,

'அவனிறந்த இடத்தினிலே விழா நடத்தி
அரசனுள்ளம் விநோதையுள்ளம் மகிழ்வதென்றால்,
எவன் ஒப்ப முடியுமதை? எதுநமக்குத்
துன்பமது யாமெல்லாம் மகிழ்வதற்கே?

கவலையெலாம் நமக்களிக்கச் சேந்தன் தன்னைச்
சுட்டெரித்த காரணந்தான் என்ன என்றால்,
அவள்விருப்பம் நிறைவேற வைப்ப தொன்றே!
அவள் அயலாள்! ஒழுக்கமிலாள்! பெரும்பரத்தை.

"நம்தலைவன் அவள்பகைவன்; செழியன் அன்னான்
நமக்கும்நம் தலைவனுக்கும் எதிரி யாவான்.
நம்தலைவன் இறந்தஇடம் தனிலே அன்னாள்
நடத்தவரும் விழாவினையாம் தடுத்தோம்! மன்னன்
நம்தலையை வாங்கிவிட ஆணை யிட்டான்.
நம்தலையை நம்மவரே வாங்கு வாராம்!
இந்தநிலை தன்னைநீர் வரவேற்பீரோ?
இனத்தாரே ஏதுரைப்பீர்?" என்றான் வேலன்.

படைவீரர் தம்தலைவன் முகம்பார்த் தார்கள்
படைத்தலைவன் சிரித்தபடி உலவ லானான்.
படைவீடு திறந்தபா டில்லை இன்னும்
பாய்ந்திடுமுன் இருந்தபுலி போலி ருந்தார்.
நடைபோட்டு வந்தவர்கள்! வேலன் தன்னை,
"நடப்பதினி என்ன?" வென்று நண்ணலானார்.
படைவீடு திறக்குமொரு சாவி யோடு்
பத்துப்பேர் அங்குவரப் பார்த்தான் வேலன்.

பத்துப்பேர் கால்கைகள் கட்டப் பட்டார்!
பார்த்திருந்த படைவீரர் தம்மில் ஓர் ஆள்,
"இத்தோழர் மன்னவரின் ஆணை யாலே
இங்கு வந்தார்; உன்செய்கை ஏற்கா" தென்றார்.
இத்தோழர் அச்சொல்லை முடிக்கு முன்பே
எட்டிஉதைக் கப்பட்டார். இடுப்பின் மீது
முத்தோழர் முன்வந்தார். மூக்கு டைந்தார்.
மூண்டதங்குப் பெருஞ்சண்டை! படைக ளின்றி!

வலக்கூன்கை எதிர்மார்பின் மீதில் ஆழ்
வருமுன்னே இடப்பெருங்கை தடுக்கும் ஆங்கே;
இலக்கென்று விலாப்புறத்தில் பாயும் காலை
இடதுகால் தடுத்தடக்கும்! தோளில் போட்ட
வலக்கைமேல் கையூன்றி முறிக்கும், மேலே
படுங்காலை எதிரியின்கால் பாய்ந்து தட்டும்;
தலையுடையும்; தலையுடைத்து முறியும் முன்கை?
தடுப்பரிதாய்த் தளராப்போர் நடக்கும் போதில்,

படக்கென்று படைவீட்டின் கதவை ஓர் ஆள்
பாங்காகத் திறந்துவிட இருசா ராரும்
வெடுக்கென்று பாய்ந்தார்கள், படைவீட்டுக்குள்,
வெறுங்கைகள் துப்பாக்கிக் கைகள் ஆக
வெடித்ததொரு முதல் வெடிதான். "சண்டை ஒன்றும்
வேண்டாம என் றொருகுரலைக் கேட்டார் யாரும்!
அடுத்துநின்ற வண்டிக்குள் இருந்த ஓர்கை
அடையாளப் புலியாழி காட்டி அங்கே.

வல்லானின் கையி லொன்றும் நின்றிருந்த
வடிவேலன் கையிலொன்றும் அறிக்கை நீட்ட,
எல்லாரும் கேட்கும்வகை படிக்க லானார்;
"இன்றுவிழா நடக்கட்டும் சண்டை வேண்டாம்
நல்லதொரு புலிஆழி கண்டீர்!" சேந்தன்
நல்கியதோர் அவ் ஆழி! நான்த லைவன்!
சொல்லியதை மறுக்காதீர்!" இதனைக் கேட்ட
தூயவரும் வேலவனும் வியப்பில் ஆழ்ந்தார்!







( 85 )


( 90 )





( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )





( 135 )





( 140 )




( 145 )





( 150 )





( 155 )




( 160 )





( 165 )




( 170 )





( 175 )

பிரிவு -- 54

(திருமண விழாவில் பெருங் கலகம்.)

அகவல்

சேந்தன் இல்லம் சிறப்புற் றிருந்தது.
வாய்த்தமின் விளக்குகள் வல்லிருள் கடிந்தன
கூட நடுவில் ஆட ரங்கம்;
அமைந்தது. கட்டில்கள் அழகுற அமைந்தன.
இசையில் வல்லார் எவரும் வராததால்,
"ஆடல் துவக்கம் ஆகுக!" என்றே
விநோதை அங்கு விளம்பி அமர்ந்தாள்.
அவளுடன் செழியன் அமரந்தி ருந்தான்.
படையின் வீரர் பற்பலர் இருந்தனர்.
சில்லி ஒருபுறம் செயலற் றிருந்தான்.
அல்லிஎல் கேஎன முணுமு ணுத்தனர்.
ஆட்கள் அல்லியை அழைக்கச் சென்றனர்.

தம்பிரான் தாடி மீசை தள்ளி
அழகொடு முன்வர, அப்பொழு தல்லி
வந்தாள் விநோதை வா "ஆடெ" ன்றாள்
ஆட இசைந்த அல்லியை. "ஆடேல
என்று தம்பிரான் இயம்பித் தடுத்தான்.
சில்லி, "நீ யார்?" என்று செப்பினான்.
தம்பிரான். "நான் தான் தம்பிரான என்றான்.
அனைவரும் வியப்பில் ஆழ்ந்தி ருந்தார்.

"தம்பிரனுக்கும் தைய லுக்கும்
என்ன தொடர பென இருத்தவர் கேட்கச்
சில்லி தம்பிரானிடம் செப்பு கின்றான்;
"நாட்டாருக்கும் நங்கைவிநோதைக்கும்
விளைந்த போரில் விநோதை வென்றதை
நீயறி வாயே! விநோதையை நீஏன்
பகைத்துக் கொள்ளும் பாங்கில் பேசினாய்?
ஆடா தேஎன அவளைஏன் தடுத்தாய்?

ஆடும் படிநீ அறிவி" என்றான்.
"ஆடினால் உடல்நலம் அழியும என்று
தம்பிரான் தயங்காது சாற்றி நின்றான்.
விநோதை வெகுண்டு, " விரைவில் அவனைச்
சிறையல் அடைக்க!" என்று செப்பினாள்.
காவலர் இருவர் கடிதில் வந்து
தம்பி ரானைப் பற்றினார் தளராது.
அல்லி ஓடி அவனை மீட்டாள்.
விநோதை, "அல்லியை விலக்கி, அவளின்
கையை இறுகக் கட்டிக் கிடத்துக!"
என்னலும் அவ்வா றியற்றினர்! தம்பிரான்
சிறைக்குச் சென்றான்! விநோதை செப்புவாள்;

"கலகக் காரர் கைவலுத் துள்ளதே!
ஆதலால் என்றன் ஆணையை மறுத்தனர்;
நாளைக் கறிவார் நம்செல் வாக்கை;
நாளை மன்னர் தோட்ட நடுவில்
இவ்விழாத் தொடர்ச்சி இனிது நடக்கும்!
நாட்டு மக்கள் வருவார்! நன்று
பாட்டும் கூத்தும் பலவும் நடைபெறும்!
நீவிர் அனைவரும் வருக!
ஆவலோடு விருந்துண்டு செல்க இன்றே!"






( 180 )




( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )





( 210 )




( 215 )





( 220 )




( 225 )

பிரிவு -- 55

(மக்கள் ஐயம்.)

அறுசீர் விருத்தம்

"அன்றுநம் நாட்டில் அன்பர்
அனைவர்க்கும் நடுவில் வந்து,
நன்றுதன் உருமறைத்தும்
நலமிலா அறிக்கை தந்தும்
பொன்றிகழ் புலியின் ஆழி
காட்டியும் போனான் அன்றோ?
அன்னவன் யாவன்? ஒன்றும்
அறிகிலேம்!' என்றான் வேலன்.

"வண்டிக்குள் தலைம றைத்த
வகையென்ன? தன்னை யாரும்
கண்டிரா வகைபு ரிந்த
காரணம் அதனை நோக்கின்,
திண்டிறல் செழியன் என்றே
செப்புதல் வேண்டும் மேலும்
பண்டுநம் சேந்தனார்தம்
பழநண்பன் செழிய னன்றோ;"
எனஒரு தோழன் சொன்னான்,
"இருக்கலாம என்றார் சில்லோர்.
"விநோதைக்குத் தன்னை விற்ற
வீணனோ நம்த லைவன்?"

எனஒரு தோழன் கேட்டான்.
"இருக்கலாம்!" என்றார் சில்லோர்.
"அனைத்தையும் போகப் போக
அறியலாம என்றான் ஓர் ஆள்!
எண்ணத்தில் ஆழ்ந்த வேலன்
இயம்புவான், 'படைவீ ரர்க்குள்

எண்ணினால் நூற்றுக் கைவர்
ஏந்தலை ஆத ரிப்பார்.
மண்ணகம் புகழும் வல்லான்
நாட்டிற்கே வாழு கின்றான்,
தண்ணருங் குறிஞ்சித் திட்டில்
சரிபாதி நமது கட்சி!"

"கைப்பாக்கி மக்கள் நெஞ்சைத்
களிப்பாக்கித் தன்னி னத்தைத்
தப்பாக்கும் வழியிற் செல்லும்
தலைக்கொழுப் பாளை, வந்தாள்
எப்பாக்கி தானும் இன்றி
இருப்பினும், அவனைக் கொல்லத்
துப்பாக்கி ஒன்று போதும
என்றான்ஓர் துணிவு மிக்கான்.

"நாலுதுப் பாக்கி உண்டு.
நம்மிடம்! நோன்பு கொண்ட
நூறாயி ரம்பேர் உள்ளார்
நம்பங்கில்! படைவீ ரர்கள்
வேறல்லர்! பெரும்பா லோர்கள்
நம்நோக்கம் விரும்பு கின்றார்,
ஏறுவோம் பகையை நோக்கி,
இரண்டுநாள் கழிந்த பின்னர்.

"நாளைக்குத் தோட்டந் தன்னில்
நடந்திடும் விழாவில், நாமும்
வேளைதாழ்க் காமல் செல்ல
வேண்டுமென றுரைத்தான் வேலன்.
காளைகள் தோளு யர்த்திக்
"கனிதமிழ் வெல்க வெல்க
ஆளவந் தார்கள் வாழ்க!
அறம் வாழ்க வாழ்க!" என்றார்.







( 230 )




( 235 )





( 240 )




( 245 )





( 250 )





( 255 )





( 260 )




( 265 )





( 270 )




( 275 )





( 280 )