கண்ணகி புரட்சிக் காப்பியம்
இயல் 31
|
தென்திசைநோக் கி்ச்சென்றோர் வளநீர்ப்
பண்ணை
திகழ்பொய்கை சூழ்ந்தஓர் மலர்ப்பூங் காவில்
நன்றிருந்தார்! அப்போதில் ஒருபார்ப் பான்தான்
நண்ணலுற்றான் ஊர்யாது வந்த செய்தி
என்னஎன்ற கோவலற்கே குடம லைநாட்
டின்மாங்கா டென்னுமூர் உடையேன் இங்கே
நன்றான திருவரங்கம் வேங்க டம்காண்
கின்றஓர் நசையாலே வந்தேன் என்ன;
மதுரைக்கு வழிகேட்டான் கோவ லன்தான்
மற்றிந்த நெடுவழியைக் கடந்து சென்று
முதுகொடும்பா ளூர் அடைந்தால் அங்குத் தோன்றும்
மூவழியில் வலப்பக்க வழியே சென்றால்
மதிதென்னர் சிறுகுன்றம் தோன்றும் அஃது
வலந்தள்ளிச் செல்லுவீர் இடப்பக் கத்தின்
அதர்ஏகத் திருமால்குன் றத்தைக் காண்பீர்
அங்குண்டோர் பிலம்; அதன்கண் மூன்று பொய்கை;
முதற்பொய்கை மூழ்கினால் ஐந்தி ரத்தை
முழுதுணர்வீர் மற்றொன்றால் பழம்பி றப்பும்
அதன்பின்ன தால்விரும்பும் பேறும் காண்பீர்;
அவ்வழியே மதுரைக்குச் செல்லல் நன்றாம்.
இதுவன்றி நடுவிலுள வழியே சென்றால்
இடர்உண்டாம் என்றுரைத்து நகைவி ளைத்தான்
மதியுடைய கோவலனும் நகைத்தா னாகி
வழுத்துவான் பார்ப்பனனும் விழித்தா னானான்.
படிவதனால் பொய்கையிலே ஐந்தி ரத்தைப்
படித்தநிலை வந்திடுமோ! ஆரி யத்தைப்
படிப்பதனால் ஆவதென்ன? பழம்பி றப்புப்
படுபொய்யோ உண்மையோ முடிவார் கண்டார்?
முடிவில் ஒன்றால் விரும்புவது கிடைக்கு மென்றால்
முழுப்பொய்யை நம்புவார் உள்ளார் போலும்!
நடப்பார்ப்பான் ஆரியத்தைப் பிறர்உள் ளத்தில்!
நாம்நடப்போம் நடுவழியே என்றார். ஆங்கே. |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
|
வேட்டுவர்ஓர் குமரிக்குக் கோலம் செய்து
விழாநடத்தும் அதனையே முகந்தி ருப்பி
நீட்டுவிழிக் கண்ணகிதான் பார்த்த வண்ணம்
நேயனொடும் கவுந்தியொடும் நடக்கலானாள்
வாட்டமுறு பொதிகையினிற் தோன்றித் தென்னன்
மதுரையினில் வளர்தென்றல் வீச, மற்றும்
ஊட்டுகுளிர் வானிலவு பகலைச் செய்ய
ஒழுக்கமிலாப் பார்ப்பனர்வாழ் புறத்தே சேர்ந்தார்.
கவுந்தியினைக் கண்ணகியைக் காலை ஓர்பால்
காப்பான வேலிசூழ் நல்இடத்தில்
உவந்திருப்பீர் என்றுரைத்து நீர்நி லைதான்
உள்ளஇடம் தேடியே நெடிது சென்றான்;
"அவண்தனித்த மாதவியே இந்நே ரத்தில்
அல்லலென்ன உற்றனையோ" என்னும் ஓர்சொல்
வணிருந்து வந்ததெனக் கோவலன்தான்
எண்ணினான் ஓர்பார்ப்பைக் கண்ணிற் கண்டான்.
ஏதுரைத்தாய் அதன்பொருள்தான் என்ன என்றே
எதிர்வந்த பார்ப்பனனைக் கோவ லன்தான்,
ஒதென்ன "மாசாத்து வானும் அன்னோன்
உயிரனையாள் தானுமவர் உறவி னோரும்
போதெல்லாம் துன்பமெனும் கடலுட் பட்டுப்
புறமீள வகையின்றிக் "கோவலன்தான்
யாதுற்றான்! எங்குள்ளான என வையத்துள்
எப்புறத்தும் தேடவிட்டார என்று சொன்னான்.
|
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
|
முன் அதனைக் கூறினோன் பின்னும் "ஐயா
மொய்குழலாள் மாதவிதான் எனைஅ ழைத்தே
தன்எழுத்துத் திருமுகத்து என்பால் தந்து
'தருகஎன் கோவலனைத் தேடி' என்றாள்
சொன்னமொழி கொண்டும்மைக் கண்டு கொண்டேன்
தூயோரே எனத்தந்தான்! கோவலன்தான்
மன்னஞ்சல் திறக்குங்கால், மண்ணழுத்தில்
மாதவியின் மேனிமணம் மருவ லானான்
பெற்றவர்கள் தம்முயிரைப் பிரிந்து போகப்
பெற்றவர்கள் ஆனார்கள்; மற்றுமுள்ள
உற்றவர்கள் தாம்பெற்ற செல்வம் ஏகல்
உற்றவர்கள் ஆனார்கள்; நாட்டிலுள்ள
கற்றவர்கள் எல்லாரும் அழுது பாடக்
கற்றவர்கள் ஆனார்கள்; துறவு கொண்ட
நற்றவர்கள் உமைத்துறக்க ஆற்று கில்லார்
நங்கையுடன் சென்றீரே எனைப்பி ரிந்து!
சூழலுற்ற கோவலன்தான் அங்கு வந்து
சூழலுற்ற பாணருடன் மகிழ்வினோடும்
யாழிசைத்தே மதுரைதான் எங்கே என்ன
இதுமதுரைத் தென்றலே அஃதண் மைத்தே
வாழ்கஎன்றார்; மூவருமே வழிகடந்து,
வையையினைப் புணைமரத்தால் கடந்தே ஆற்றின்
வீழ்புனலின் தென்கரையை மேவி ஆங்கே
விரிமதுரை மதிற்புறத்தோர் சேரி புக்கார்.
|
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
|
புக்கிருந்த புறஞ்சேரிச் சார்பில் உள்ள
பூம்பொழிலில் வளவயலில் புள்ளி னங்கள்
ஒக்கவே எழுந்தார்ப்ப வைக றைக்கண்
ஊர்ச்சாந்த பொய்கைத்தா மரைஅ ரும்பின்
மிக்கனவாம் இதழ்விரித்த இளஞா யிற்றின்
மென்கதிரின் பொன்னொளிபோய் இன்னல் காணா
மக்களினைத் துயிலெழுப்ப, முரசால் சங்கால்
மதுரைபெற்ற மங்கலம் இவ்வுலகர் பெற்றார்!
மதுரைநகர்ப் பாங்குகண்டு மக்கள் வாழ்வின்
வகைகண்டு வருவேண்இங் கிருக்க என்று
முதிர்அன்பு மங்கையால், அடிக ளின்பால்
மொழிந்தானாய்ச் சொல்லுகின்ற கோவ லன்தான்
மதிக்கலுறும் மறந்துறையின் விளங்கின்ற மன்னவனின் கோயிலையும் அமைச்சர் ஒற்றர்
பதிபலவும் அவண்வருவார் போவார் நெஞ்சப்
பாங்கினையும் கண்டுமேற் கொண்டு சென்றான்
மாண்அகத்துத் தமிழ்ப்புலவர் பேர வைகள்
வான்எட்டும் மாடங்கள் மலிதெ ருக்கள்
வாணிகத்து நிலையங்கள் அறமன் றங்கள்
மான்எட்டும் விழிமாதர் ஆடும் பூங்கா
பூண்அகத்துப் பூண் அதுதான் கல்வி என்று
புடைஎட்டும் கழகங்கள் கண்டான் மேலும்
காண்அகத்தான் தொழில்பலவும் காணச் சென்றான்
கண்டவர்கள் கோவலனைப் பின்தொடர்ந்தார்!
|
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
|
இதுவென்ன? எனக்கேட்பான் கோவலன்தான்!
இன்னதென விளக்குவார் ஆயிரம்பேர்!
புதிதென்ன இன்னும்எனில் ஆயிரம் பேர்;
போம் வழினயக்
காட்டுதற்கே முன்நடப்பார்.
எதுவேனும் அவன் சொன்னால் சொல்இருந்த
இனிதான உளங்கொண்டு மகிழா நிற்பார்;
மதுஓடும் பக்கமெலாம் கூட்ட மான
வண்டோடிக் கொண்டிருந்தல் வியப்பே அன்றாம்!
சூழ்ந்திருந்த நல்லோரிற் சில்லோர் கேட்கத்
தூயமனம் வருந்தாமை கருதித் தான்முன்
வாழ்ந்திருந்த வரலாற்றுச் சுருக்கம் சொல்லி
மற்றுந்தான் காணுவன கண்டே, அஞ்சி
வீழ்ந்தணரோ சேரியிலே தங்கி யுள்ளார்
விரைந்துநான் சென்றிடத்தான் வேண்டு மென்றே
ஆழ்ந்துள்ள எண்ணத்து மக்கள் தம்பால்
அறிவித்து நெறிபற்றித் தனியே சென்றான்!
விடிந்துவிடும்முன் அகன்று வெங்க திர்போய்
விழுந்தபின்னும் வரவிலையே!; என்கண் ணீர்தான்
வடிந்துவிடும் எனுங்கருத்தோ! துணைபி ரிந்தும்
வாழ்ந்திருப்பேன் எனுங்கருத்தோ! எனஉயிர்தான்
முடிந்துவிடு மோஎன்னும் நிலை யடைந்து
மொய்குழலின் மலர்சிதற ஐயோ என்ற
ஒடிந்துவிழும் பூங்கொடியைத் தாங்கி நின்றான்
உள்ளத்தும் கண்ணகியைத் தாங்கும் செம்மல்.
|
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
|
ஊர்ஏகிப் புறஞ்சேரி மீண்ட செம்மல்
உயர்மதுரைச் சிறப்பினையும் பாண்டி மன்னன்
சீர்மிக்க வெற்றியையும் கவுந்தி யின்பால்
செப்புகையில் தலைச்செங்கா னத்து வாழ்வோன்;
ஓர்பார்ப்பான் மாடலன்தான் குமரி ஆடி
உடன்மீள்வோன் கவுந்தியினைக் காணு தற்கு
நேர்வந்தான். கோவலனும் வருக என்றான்
நெஞ்சத்து மிகமகிழ்ச்சி கொண்டான் பார்ப்பான்
வரவேற்றான் கோவலனை மாட லன்தான்
வண்மையிலும் தன்மையிலும் நிகரி லாதீர்!
மருமலர்த்தார் மார்பனீர் நீவிர் இந்த
மாணிக்கக் கொழுந்தோடு வந்த தென்ன
உரைக்கஎனக் கோவலன்தான் ஐயா இங்கே
உற்றதொன்று பெரிதன்றே வரவி ருக்கும்
ஒருபெரிய தீங்குண்டு போலும்! எண்ண
உளநடுங்கும் கனவொன்று கண்டேன் என்றான்.
அடிகள்தாம் அதுகேட்டுக் கூறு கின்றார்
''அறங்காணாப் பார்ப்பனர்கள் ஊர்ந்த ஊரில்
குடிபுகுந்தீர் அச்சத்தில் குடிபு குந்தீர்
கொள்நினைவே கனவாகும் ஆத லாலே
நொடியில்இவ் விடம்விட்டு மதுரை செல்க''
நுவல இது! கோவலனும் நன்றே என்றான்.
அடிகளிடம் மாதரிவந் தாள்அந்நேரம்!
அன்னவள்ஓர் ஆயர்மகள்; முதியோள்; நல்லாள்!
|
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
|
கொடுமையிலா வாழ்க்கையினை உடையாள்
ஆப்பால்
கெண்டளிக்கும் குடியுடையாள்;முதியாள்; நல்லள்
நடுநிலையாள் மாதரிபால் அன்பு மிக்க
நங்கையினை இருத்தலாம் எனக் கவுந்தி
அடிகள்தாம் உரைத்தவுடன் கோவ லன்தான்
அன்னாய்என் கண்ணகியாம் மனைவி தான்நின்
அடைக்கலமே எனவுரைத்து மனையாள் கையை
அவள்கையில் பிடித்தளித்துக் கண்ணீர் வார்த்தான்!
கனவெண்ணி நெஞ்சத்தில் கலக்கம் வைத்தும்
கண்களிலே அருவிவைத்தும், சூழ்ந்தி ருந்த
அனைவோரின் நடுவின்மா தரிதான் ஏந்தும்
அங்கையினாற் செங்கைதான் பற்றப் பட்டும்
முனம்மறந்து பின்நினைந்து வந்து, காட்டா
முகம்காட்டிச் சாவாளை வாழ வைத்த
இனியவனை இனிப்பிரிதல் உண்டு போலும்
என்றெண்ணிக் கண்ணகிதான் ஏங்கலுற்றாள்;
ஏங்கினாட் கேங்கினான் கோவ லன்தான்!
ஏங்கினார் அங்கிருந்த மக்கள் யாரும்!
தீங்கற்றான் தீங்கற்றாள் இன்ன வண்ணம்
சிறுமையினில் ஆழ்கின்ற நிலையை எண்ணி
ஆங்கிருந்த துறந்தாளும் அழுதிருந்தாள்
'அடிகளே வணக்கம்' என்றான் செம்மல்! மங்கை
நீங்கினிரோ எனத்தொழுதாள்! நடக்கலுற்றார்
நேயந்து மாதரியினோடு நேரே,
|
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
|
மாதிரியின் இல்லத்திற் சேர்ந்தார்
ஆக
மாதர்இயற் றும்பணியை நான் நான் என்று
மாதரிந்து காய்கறியைச் சமையல் முற்றும்
மாதரிவை செயற்கரிய எனமு டித்தே
ஓதரிய குணமுடைய கோவ லற்கே
உணவிட்டு வெற்றிலைபாக் கீந்து நிற்கக்,
காதலியைக் கோவலன்தான் கேட்ட தான
காற்சிலம்பி ரண்டிலொன்று கழற்றித் தந்தாள்.
கண்ணகியே என்னோடு காட்டி லெல்லாம்
கால்நோவ நடந்ததனை என்பெற் றோர்கள்
எண்ணியே என்னதுயர் எய்தி னாரோ!
யானும்உனக் கிழைத்ததுயர் சிறிய தன்று!
பண்ணரிய பொற்பாவாய்! நான்சு மந்த
பழுதகற்ற வந்தவளே அழுதல் வேண்டாம்
நண்ணிடுவேன் விரைவாக இதனை விற்றே
நல்லவளே எனச்செம்மல் சொல்லிச் சொன்றான்.
கலம்பாடிச் சரக்கேற்றி அயலில் விற்கும்!
கலம்பாடிச் சரக்கேற்றி நாடு மீளும்!
இலம்பாடி வந்தோர்க்கே இல்லை என்னார்!
இனம்பாடும் புலவர்க்கே எல்லாம் என்போர்!
நலம்பாடும் செல்வமெலாம் கடல்போற் கொண்ட
நாட்டுக்குப் பாடுபடு வாரின் மைந்தன்
சிலம்பொன்றின் விலைபாடச் சொல்லும் காட்சி
சிறுமைக்குக் கண்ணாடி என்றார் கண்டோர்!
|
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
|
நிலம்பிரித்து நாலானாற் போலும், தண்மை
நீர்பிரிந்து மூன்றானாற் போலும், ஒண்மைப்
பொலம்பிரிந்து பல்அணிகள் ஆகி; வண்ணப்
பூவுடம்பெல் லாம்குலுங்கப் பெற்ற மன்னி
புலம்பிரியா மணவாளள் பஞ்ச ணைக்கண்
புனருங்கால் பட்டுறுத்தும் என்று, பூண்ட
சிலம்பிரண்டை யும்கழற்றி அணிந்திருந்த
திருப்பள்ளிப் பெட்டகத்தின் மீது வைத்தாள்!
மணம்வேண்டும் நாமொன்றி வாழவேண்டும்;
மனம்வைப்பாய் எனக்கேட்ட வஞ்சி தன்னைப்
பணம்வேண்டும் எனக்கேட்டான் கருங்கை என்பான்
பள்ளியினில் துயிலெழுப்பும் போதில் கண்ட
வணம்சிறந்த சிலம்பிரண்டில் ஒன்றெ டுத்து
வந்துகருங் கையிடத்தே வஞ்சி நீட்ட
இணங்கிஎன் கண்ணாட்டி உன்னை மன்னி
எடுத்தாயா எனக்கேட்டால் இல்லை என்க.
இன்னுங்கேள் வஞ்சியே இக்கள் ளத்தை
இம்மியள வுரைத்தாலும் நம்இ ரண்டு
முன்னங்கை கால்கட்டித் தீயில் இட்டே
முழுதுடம்பும் பொரித்தெடுத்துத் தெருவில் எங்கும்
'இந்நங்கை! இம்மைந்தன்! காண்பீர்'' என்பார்.
என்றுரைத்தான்! ''செத்தாலும் சொல்லேன்'' என்றாள்
''நன்மணந்தான் என்றென்றாள் 'இச்சிலம்பு
நமக்குறுதி யானவுடன் நடக்கும்'' என்றான்
|
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
|
நம்கோப்பெ ரும்பெண்டின் சிலம்பெங்கென்ன
நானறியேன் நானறியேன் என்று கோயில்
தங்குவார் தனித்தனியே சொல்லப் பின்னர்த்
தயங்கிநின்ற வஞ்சியினைக் கேட்டபோதில்
''எங்கள்மணம் முடிப்பதற்கும் காசே இல்லை
என்கருங்கை மாப்பிளைக்கும் வேலை இல்லை!
உங்கள்சிலம்பெங்களிடம் இருந்திருந்தால்
உடனேஎம் மணமுடியும் அன்றோ'' என்றாள்
ஆகாமல் இருக்குமா மணந்தான்? - என்றே
அத்தமுறச் சொல்லிவிட்டேன் என்றாள் வஞ்சி!
''ஏகேடி என்பெயரை ஏன்இ ழுத்தாய்!
இலைமறைக்கக் காம்பையும்நீ காட்ட லாமா?
நீகூறி னாய்நீட்டி நீட்டிக் கேட்டே
நிறுத்திக்கொண் டார்அவர்தம் பேச்சை என்றாய்
காகாஎன் பதைநிறுத்திக் கொண்ட காக்கை
கருத்தையெல்லாம் துப்பறியச் செலுத்திற்றாகும்!
|
( 225 )
( 230 )
( 235 )
|
|
|
|