பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு377

Untitled Document
1730 ஈசன் அருளைப் பெறுவதிலும்
     இடையே தரகர்க்கு இடமுண்டோ?
பேசின், இவர்செய் சூதுலகில்
     பெரிய சூதென் றறியாயோ?
பூசு நீறும், கண்டிகையும்
     புரிமுந் நூலும் பூண்டதலால்,
காசு பணத்தின் ஆசையவர்
     கடந்த தில்லை இல்லையடா!
61

1731 தேடும் ஈசன் திருவடியிற்
     சேர வழியொன் றுண்டு, அதனை,
நீடு வழியாய்ச் சிறுவழியாய்
     நிகழச் செய்வோன் நீயேயாம்;
நாடுங் கோயில் மடங்களெலாம்,
     நம்பன் அடியார் அவ்வழியில்
கூடித் தங்கும் நீழல்களாம்;
     குடிக்கும் தண்ணீர்ப் பந்தல்களாம்.
62

1732 மண்ணை மண்ணில் உதறிவிட்டு,
     மாசு மறுவொன் றில்லாமல்,
விண்ணிற் செல்ல வல்லதெனில்,
     விளங்கும் ஆன்மா, இப்புவியில்
நண்ணி இந்த நாள்வரையும்
     நலிந்து சிறையில் இருந்ததனை
எண்ணி வெட்கம் அடையாதோ?
     இதன்மேல் வெட்கம் வேறுண்டோ?
63

1733 காசு பணத்தைக் கண்டவர்ஆர்?
     கண்டு கறங்கிச் சுழல்பவர் ஆர்?
பூசை பலவும் புரிபவர் ஆர்?
     புரிந்து பிழைகள் செய்பவர் ஆர்?
நாச நரகை வகுத்தவர் ஆர்?
     நரகை எண்ணி நலிபவர்ஆர்?
ஈச னருளை அறியாத
     ஏழை மனித! நீயலவோ?
64