பக்கம் எண் :

மீரா கவிதைகள்.83

குயிலிசை ஒருநாள் கேட்கவில்லை - எனில்
குளிர்செவி யிரண்டும் எரிவதில்லை;
மயில்நட மொருநாள் பார்க்கவில்லை - எனில்
மணிவிழி யிரண்டும் அழுவதில்லை;
பயின்றிட ஒருநாள் செல்லவில்லை - எனில்
படிப்பே அத்துடன் முடிவதில்லை;
உயிரே! உனைத்தினம் தழுவவில்லை - எனில்
உலகே எனக்கு முடிவதுமேன்?

‘தமிழ்நாடு’
13-5-62