| 21. நூல்நிலையம் அமைத்த காதை | |
| |
| | பூங்கொடி வேண்டல் | |
| | | |
| | `வாழிய என்றெனை வாழ்த்திய பெரியீர்! ஏழிரண் டாண்டுகள் இடரொன் றுளதெனக் கூறிடக் கேட்டுளம் கொடுந்துயர் உற்றேன்; மாறிய தவ்விடர் எனும்அம் மாற்றம் | |
| | தொடுத்துடன் மொழிந்தீர் அடுத்துளம் மகிழ்ந்தேன் | 5 |
| | படுத்திய அவ்விடர் பாவைநான் உணர எடுத்து மொழிய இயலுமோ பெரும!' என்றிளம் பூங்கொடி இரங்கினள் வேண்ட, | |
| | | |
| | மகள் வரலாறு | |
| | | |
| | `நன்று கனிமொழி நவிலுவென் கேண்மோ! | |
| | உருவும் எழிலும் உன்போல் ஒருத்தி, | 10 |
| | பருவம் நிறைமகள், பாவிஎன் மடமகள் உருவளர் முழுமதி ஒப்பத் திகழ்ந்தனள், ஆடலும் பாடலும் அவட்குயிர் ஆகும், ஏடவிழ் கோதை எனக்குயிர் ஆகும், | |
| | நாடிய துறையில் நன்கனம் தேர்ந்து | 15 |
| | பாடுங் குயிலாய், ஆடும் மயிலாய், வீடகம் எல்லாம் பாடகம் சிலம்ப ஊடகம் குளிர உவந்து திரிந்தனள்; | |
| | | |
| | மகட் பிரிவு | |
| | | |
| | ஒருநாள் | |
| | பாட்டியல் வழுவாப் பண்ணொலி அடங்க | 20 |
| | மீட்டிய யாழும் கூட்டினுள் முடங்க | |
| --------------------------------------------------------------- |
| | ஏடு - பூவிதழ், நன்கனம் - நன்கு, பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒரு வகை அணி, சிலம்ப - ஒலிக்க, ஊடகம் - உள்மனம். | |
| | | |