Untitled Document
| 66. | | துன்பத்தில் நீயே துணையென்பேன்; அன்றி, வரும் இன்பத்தில் ஏதும்உனை எண்ணுகிலேன் - அன்பற்ற பாவஎனைப் போல் இந்தப் பாரில் ஒருவருண்டோ? தேவிகா மாட்சியே செப்பு. |
| 67. | | மனைவி மக்களும் மாண்டு மறைந்தனர்; வாழ்ந்த வீடும் குடியும் இழந்தனன்; இனிய நட்பினர் யாவரும் ஏகினர்; ஏழை ஆண்டி ஏகாங்கி ஆயினேன்; எனையும் இந்நிலை கண்டனை, இன்னுமிங்கு இன்ன லேதும் இழைத்திட உள்ளதோ? உனையும் அன்னையென் றோதி அழைத்திடேன்; உலகெ லாந்தரும் தேவிகா மாட்சியே! |
| 68. | | திண்ணமாய் வீடுதொறும் - இரந்து திரியத் தேறி விட்டேன்; மண்ணிலே தாயில்லாப் - பிள்ளையும் வளர்வ துண்டலவோ? |
| 69. | | எண்ணி உனைத்தேடி - அம்மா என்று ஏங்கி அழுதுநின்றேன்; கண்ணுந் தெரிவதில்லை - உனக்குக் காதும் கேட்பதில்லை. |
| 70. | | தாய்இருக் கையிலே - மிகவே தளர்ந்து வாடுமெனில் சேயினுக் கவளால் - உலகில் சிறிதும் நன்மையுண்டோ? |
| 71. | | ஈன்ற பிள்ளைக்கே - கொடிய எதிரி ஆவாயோ? ஆன்ற உலகிலே - தாயின் அறமும் ஈதேயோ? | |
|
|