பக்கம் எண் :

சின்ன வயதில்
என்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்.

கையில் அரிவாள்;
கண்ணில் கொலைவெறி,
நாவில் குருதிப்பசி,
கோரத் தோற்றம்
கொண்ட ஒரு சிலையைக் காட்டி
“இதுதான்
உன் குலதெய்வம், கும்பிடு”
என்றார்கள்
நான் கும்பிட்டேனோ, என்னவோ?

அமிர்தத்தின் மகளான
உன்னைக் கண்டபோது
யாரும் கூறாமலேயே
என் வாய்,
குலதெய்வம், குலதெய்வம்
என்று உச்சரித்தது;
என்னைக் கேட்காமலேயே
என் கை குவிந்தது.

இனிமேல்
என்னை யாரும் ஏமாற்ற முடியாது.

35