வானஊ ர்தி வான ஊர்தி
எங்கே போகின்றாய்?-நான்
வாடிக்கையாய்ப் போவது இ
லங்கை மாநகர்.
பானை ஒன்று குறுக்கில் வந்தால்
என்ன செய்குவாய்?-"அட
பானை ஏது சட்டி ஏது
வான வெளியிலே"
ஆனை ஒன்று குறுக்கில் வந்தால்
என்ன செய்குவாய்?-"அட
ஆனை ஏது பூனை ஏது
வான வெளியிலே"
கானலுக்கு இளைப்பாற
எங்கே தங்குவாய்?-"நான்
போனவுடன் கீழிறங்கிப்
பொழுது போக்குவேன
எத்தனைபேர் இருக்கின்றார்கள்
வானவூர்தியே?-"ஆம்
இருபதுபேர் இருக்கின்றார்கள்
என் வயிற்றிலே."
மெத்தஉயரத்தேயிருந்து
விழுந்திடுவாயோ?-"என்
மேல் இருக்கும் பொறிகெட்டால்
விழுந்திடுவேனே."
மொய்த்துப்புயல் வந்து விட்டால்
என்ன செய்குவாய்?-"அந்த
மொய்த்த புயல் தாண்டுவது
ஓட்டுவார் திறம்!"
|
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
|