காதல் நினைவுகள்
ஆடுகின்றாள்
|
கொலையுலகம்
கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக் -- கலையுலகம்
சென்றேன்; மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு,
விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும் -- கழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்! அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மொய்ம்மலரில் பூரிப்பின் வித்து.
சதங்கைகொஞ்சும் பாதம் சதிமிதிக்கும், வானில்
மிதக்கும் அவள் தாமரைக்கை. மேலும் -- வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்
கண்கவரும் செம்பவளக் காம்பு.
செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள் -- பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வண்ண இடை வஞ்சிக்கொடி.
கோவை உதட்டை ஒளிதழுவும், அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தில் பாங்கிருக்கும் -- தாவும் அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.
இளமை, அழகு, சுவைகொள் இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன் -- உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமானேன். |
( 5 )
( 10 )
( 15 )
( 20 ) |
உள்ளம்
உருக்கி, உயிர்உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர் சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திட நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
பட்டு விரித்த பசும்புல்லின் ஆசனமும்
தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சந்த மகரந்தம் சாரும் சாரும் நறுமலர்த்தேன்.
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!
கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத்தரசாக வீற்றிருந்த பாங்கினிலே
கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழி நடந்தேன்!-காதல் திருவுருவம்!
என்று உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனி யிரண்டு தெரிய இருக்குமெழில்
மாதுளையே, கேளாய், மலச்சோலை நீ, நான் தான்.
வாதுண்டோ என்றேன், மலர்க்கண் சிவந்து விட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்த சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாய மருந்தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவோம்;
மாதுளமும் அங்கும் வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!
|
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 ) |
"பறந்துவா"
காதலியே,
என்விழிஉன் கட்டழகைப்
பிரிந்ததுண்டு! கவிதைஊற்றிக்
கனிந்ததமிழ் வீணைமொழி என்செவிகள்
பிரிந்ததுண்டு! கற்கண்டான
மாதுனது கனியிதழைப் பிரிந்ததுண்டென்
அள்ளூறும் வாய்தான்! ஏடி
மயிலே,
உன்உடலான மலர்மாலை
பிரிந்ததுண்டென் மார்பகந்தான்!
ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயலில்லை;
மீதமுள்ள ஆவி ஒன்றே
அவதியினாற் சிறுகூண்டிற் பெரும்பறவை
ஆயிற்றே! "அன்பு செய்தோன்
சாதல் அடைந்தான எனும் ஓர் இலக்கியத்தை
உலகுக்குத் தந்திடாதே!
சடுதியில்வா! பறந்துவா! தகதகென
முகம்காட்டுத் தையலாளே!
|
( 55 )
( 60 )
( 65 )
|
"பறப்பதற்கு சிறகில்லை"
காதல,
நான் பிழை செய்தேன்; என் ஆசை
உன்மனத்தில் கழிந்ததென்று
கருதினேன்! கடித்ததைக் கண்டவுடன்
களிப்புற்றேன்! களிப்பின்
பின்போ
வாதையுற்யேன்! பறப்பதற்குச் சிறகில்லை!
காற்றைப் போல் வந்தே
னில்லை
வனிதைஇங்கே - நீ அங்கே! இடையில்இரு
காதங்கள் வாய்ந்த தூரம்!
சாதலுக்குக் காரணம் நான் ஆகேன்
என் சாகாமருந்தே! செங்கை
தாங்கென்னை; உன்றன் நெடும்புயத்தினில்நான்
வீழ்வதற்குத் தாவு கின்றேன்.
நீதூரம் இருக்கின்றாய் ஓகோகோ
நினைப்பிழந்தேன் என்துரையே!
நிறைகாதல் உற்றவரின் கதியிதுவோ!
என் செய்கேன் நீணிலத்தே!
|
( 70 )
( 75 )
( 80 )
( 85 ) |
மங்கையவள்
வீட்டினிலே கூடத்துச் சுவரில்!
மணிப்பொறியின் இருமுள்ளும்
பிழைசெயுமோ மேற்கில்
தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி
தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும்
யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர வில்லையோ?
சிறுபுட்கள் இன்னும்ஏன் திரிந்தனவான்
வெளியில்!
திங்கள்முகம் இருள்வானில் மிதக்கஅவள் ஆம்பற்
செவ்வாயின் இதழளிக்க இன்னும்வர
விலையே!
மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும்
வயல்விட்டு வீட்டுக்கு வந்தபா
டில்லை.
துணியுலர் த்தி ஏகாலி வீடுநுழைந் திட்டால்
தொலையாத மாலைதான் தொலைந்துபோ
மன்றோ!
அணியிரவும் தூங்கிற்றோ காலொடிந்த துண்டோ;
அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்துவர
வில்லை!
பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே
பேரின்பம் எனக்கருள இன்னும்வரவிலையே!
முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்
இருக்கின்ற
பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?
பூங்கொடியாள் வருவதாய் நேற்றெனக்குச்
சொன்ன
நல்லஇரா வருவதற்கு வழிதானோ இல்லை?
நானின்பம் எய்துவதில் யாருக்குத்
துன்பம்?
சொல்லைத்தேன் ஆக்கிஎனை அத்தான் என்றள்ளிச்
சுவைக்கடலில் தள்ள அவள் இன்னும்வரவிலையே!
பெருமக்கள் கலாம்விளைக்கும் மாலைமறைந் திட்ட
பிறகுவரும் நல்லிரவு! யாவருமே
துயில்வார்!
திருமிக்காள் தன்வீட்டுப் படிஇறங்கும் போதில்
சிலம்பொலியும் இவ்விடத்தில்
கேட்டிடும் என்காதில்!
உருமிக்க பெரும்புறத்துக் கரும்பாம்பின் தீய ஒளிமாலை விழிஇன்னும் மூடாத
தேனோ!
புருவத்து வில்எரியும் நீலமலர் விழியாள்
புத்தமுதம் எனக்குதவ இன்னும்வரவிலையே!
சிற்றுளிக்கும் பிளவுபடா வல்இரும்பு போல்வாள்
தேனூற எனைநோக்கி வாய்மலர்ந்து
நின்றே
நற்றுளிகள் அமுதமுதாய் நன்கருள்செய் திட்டாள்
நள்ளிரவில் அத்தானே நான்வருவேன்
என்றே!
வெற்றொளியும் வெறுந்தொழிலும் மிகும்மாலை என்னும்
விழல்மடிய இருளருவி எப்போது
பாயும்?
பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம்
புதிதுபுதிதாய்நல்க இன்னும்வரவிலையே!
மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும்
வெந்துநீ றாகாமல் இருப்பதொரு
வியப்பே!
நற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை
நடுவிருந்து தடுக்கின் றான் பரிதி;
அவன் செய்கை
மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன்
மையலினை நான்பொறுக்க ஒருவழியுங்
காணேன்
சேற்றிற்செந்தாமரையாம் இரவில் அவள் தோற்றம்!
தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வரவிலையே!
|
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 ) |
சொல்லித்தானா தெரியவேண்டும்
|
தாயிருக்கையில் தனமிருக்கையில்
சஞ்சலமென்ன மானே -- நல்ல
பாயிருக்கையில் புழுதித் தரையில்
படுத்துப் புரளும் தேனே!
வாயிருக்கையில் கேளடி நல்ல
வான நிலவும் கொடுப்பேன் -- இன்று
நீயிருக்கிற நிலை சகியேன்
நிலத்தினில் உயிர் விடுப்பேன்.
என்ன குறைச்சல்? எதினில் தாழ்த்தி?
யானை போல அப்பா -- நீ
சொன்ன நொடியில் குறை தவிப்பார்!
சொல்லுவதும் தப்பா?
சின்ன இடுப்பு நெளிவதென்ன
சித்திரப் புழுப் போலே -- அது
கன்னி உனக்குக் கசந்ததுவோ
காய்ச்சிய பசும் பாலே?
அண்ணன்மார்கள் பாண்டியர்கள்
ஆசைக் கொரு தம்பி -- அவன்
எண்ண மெல்லாம் உன்னிடத்தில்!
ஏற்ற தங்கக் கம்பி
தண்ணென் றிருந்த உனதுமேனி
தணல்படுவது விந்தை -- உன்
கண்ணில் கண்ட அத்தானுக்குக்
கலங்கியதோ சிந்தை!
* * * * * * * * * * * * * *
|
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 ) |
'கைப்பிடியில் கூட்டிவரக்
கட்டளை இட்டாள்' என நீ
செப்புகின்றாய் வாழியவே வாழி -- '' நான்
ஒப்பவில்லை '' என்றுரைப்பாய் தோழி!
தேரடியில் கண்ட அவள்
தேனிதழைத் தந்தவுடன்
ஊருக்கெனைக் கூட்டிச் செல்க' என்றாள் -- தன்னை
யாருக்குமுன் வாக்களித்திருந்தாள்?
சோலையிலே வஞ்சியினைத்
தொட்டிடுமுன் சேல்விழியாள்
நாலுதரம் சுற்று முற்றும் பார்த்தாள் -- எந்தக்
காலிக்கவள் அஞ்சி முகம்வேர்த்தாள்?
கோட்டைவழி என்னை வரக்
கூறி அவள் நான் வருமுன்
பாட்டையிலே ஏன் தனித்து நின்றாள்? -- எனைக்
கூட்டிவரப் பசப்புகின்றாள்?
வல்லியினை முத்தமிட்டேன்
வாய்த்த என்றன் மேனியினை
மெல்ல அவள் ஏன் தடவவேண்டும்? -- வேறு
நல்ல உடலே அவட்கு வேண்டும்?
புன்னகையும் பூப்பதில்லை!
புதுமலரும் தீண்டவில்லை;
'என் நினைவால் வாடுகின்றாள்' என்றாய் -- அன்று
சன்னலிலே யாருக்காக நின்றாள்?
தொத்துகிளி யாள்எனது
தோளின் மிசை வந்திருக்கப்
'பித்துமிகுந் தாள்' என மொழிந்தாய் -- அவள்
இத்தெருவில் யாருக்காக வந்தாள்?
'ஆடுமயில் என் உளத்தை
ஆடரங்கம் ஆக்கிவிட
நாடி நலிந்தாள்' எனச்சொல் கின்றாய் -- அவள்
மாடியிலே ஏன் ஒருநாள் நின்றாள்?
|
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 ) |
மறந்துபோ நெஞ்சே
அந்த
வஞ்சியை நினைக்க வேண்டாம்
'இறந்துபோ' என்றே என்னை
இவ்விடம் தனியே விட்டாள்!
பறந்துபோ இரவே என்றேன்
எருமையா பறந்து போகும்?
உறங்கவே இல்லை கண்கள்
ஒட்டாரம் என்ன சொல்வேன்?
மருந்துகேள்! அவளை நெஞ்சே
'மறந்துபோ' துன்பம் இல்லை!
இருந்தொன்றை நினைப்பேன்; அந்த
ஏந்திழை குறுக்கில் தோன்றி
அருந்தென்பாள் கனியு தட்டை
அவள்அங்கே இருந்தால் தானே?
வரும்தென்றல்! தொடுவாள் என்னை,
மலர்மேனி இருந்தால் தானே?
பாலோடு சீனி யிட்டுப்
பருகுவேன் அங்குத் தோன்றி
மேலோடு வார்த்தை சொல்லி
விரைவோடு மறைந்து போவாள்
சேல்ஓடும் போது பின்னே
சிச்சிலி விழிகள் ஓடல்
போலோடி ஏன்அ வள்பால்
பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே!
ஏட்டினில் கவிதை தன்னில்
இவளைத்தான் காணு கின்றேன்.
கூட்டினிற் கிளியும் வானில்
குளிரிளம் பிறையும் என்றன்
வீட்டினில் திருவி ளக்கும்
அவளெழில் விளக்கல் அன்றிக்
காட்டவே இல்லை என்றன்
கவலைக்கு மருந்து நெஞ்சே!
எனைக்கண்ட தோழன் காதில்
ஏந்தினழ பிரிந்த துன்பம்
தனைச்சொன்னேன். அந்தத் தீயோன்,
தையலாள் வரும்வ ரைக்கும்
நினக்குயிர் வேண்டும்; அன்னாள்
நினைவினால் வாழ்க என்றான்.
எனக்கது சரிப்ப டாது
மறந்துபோ எனது நெஞ்சே!
|
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 ) |
மறவன் சொல்லுகிறான் :
கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக்
கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி
மண்ணிடையே வாழ்வேனை உனது மையல்
மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே!
எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை
ஏதோதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ?
தண்ணிழலைத் தாவுகின்றேன்: சாதி பேதத்
தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்பதுண்டோ?
குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன?
குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்!
மறவேந்தன் மகன்நான்தான், வார்த்தை பேதம்
மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை?
அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை
அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும்
புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப்
புனிதமடி ஒத்தஉளத்து எழுந்த காதல்
|
( 235 )
( 240 )
( 245 )
|
கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும்
கைகலக்கும் போதுகல வாதே என்று
பெரும்புவியே நீசொன்னாய் ஐய கோஉன்
பேதமைக்கு நான்அஞ்சும் அச்சத் தாலே!
அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான்
அயர்கின்றான் அயர்கின்றேன். ஒன்று பட்டு
விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்!
உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில்
உடல்எரிதல் யானறிவேன் அறியார் மற்றோர்
தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை?
தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ?
அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி
அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை
துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே! அந்தோ அந்தோ
துடுக்கடங்கி னாய்மூட வழக்கத்தாலே!
|
( 250 )
( 255 )
( 260 ) |
காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர்
கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ!
ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென்
இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்!
|
( 265 ) |
மோதவரும் ஆணழகே வாவா வாவா
முத்தம்வை இன்னொன்று; வைஇன்னொன்று
|
|
மாதரசி கனியிதழோ தேனோ -- சாதி
வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே!
|
( 270 ) |
பெண்ணே பாராய், பெண்ணே பாராய்,
வெண்ணெயில் மாப்பிசைந்து, விரிந்த உள்ளங்கை
ஒன்று கீழுற, மற்றொன்று மேலுற
மாற்றி மாற்றி வடைதட்டி, இட்டும்,
ஊற்றிய நெய்யில் 'ஒய்' என வேகுவதில்
இட்டவிழி எடாமலும், இருக்கும் ஓவியப்
பெண்ணே பாராய், பெண்ணே பாராய்!
இருவர் நாம் ஒன்றாய் இருந்து, நம் விழிநான்கு
காண, இரண்டு கருத்தும் கலந்தபடி
ஒரே நேரத்தில்நம் உயிர் இன்புறுவதை
விரும்புகின்றேன்! வீதியில் நடப்பது
கரும்பான காட்சி, காதுக்கு நறுந்தேன்!
தனித்திருந்து காண்என்று சாற்றி விடாதே!
சன்ன லண்டை என்னிடம். விரைவில்
பெண்ணே வாராய்' பெண்ணே வாராய்!
பார்த்தனை யோஎன் பச்சை மயிலே?
'புதிதிற் பூத்த பூங்காடு தான் அது'
நான் அதைப் பெண்ணென்று நவிலமாட்டேன்.
அக்காட்டின் நடுவில் 'அழகுடன் மணத்துடன்
செக்கச் செவேலெனச் செந்தா மரை' பார்!!
அதை, அவள் வாய்என்று அறைய மாட்டேன்.
அம்மலர் இரண்டிதழ் அவிழ்த்தது பார்நீ
நான் அதை உதடு என்று நவிலமாட்டேன்.
'இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்'
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந்தசைந் துகனியொடு,
பிசைந்ததேன் கேள்கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!
|
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
|
தென்றல் விளைந்தது,
முல்லை மலர்ந்தது.
தீங்குரற் பக்ஷிகள் பாடின.
குன்று நற்சோலை விநோத மலர்க்குலம்
கோலம் புரிந்தன எங்கணும்.
நின்றிருந் தான்தனி யாய்ஒரு வாலிபன்
நேரிலோர் தாமரைப் பூவிலே
அன்புறு காதலியின்முகங் கண்டனன்;
ஆம்பலில் கண்டனன் அவள்விழி!
கோதை இடைதனைப் பூங்கொடி தன்னிலும்,
கோவைப் பழத்தினில் இதழையும்,
காதலன் கண்டனன்; கங்கைப் பெருக்கெனக்
காதற்பெருக்கிற் கிடந்தனன்!
சீதளமென்மலர் தன்முக மீதனில்
சில்லென வீழ்வது போலவே
காதலி அக்கணம் பின்புறமேவந்து
கண்களைப் பொத்தினள் செங்கையால்!
கையை விலக்கித் திரும்பினன் காதலன்
காதலி நிற்பது கண்டனன்!
துய்யவன் நெஞ்சும் உடம்பும் சிலிர்த்தன
சுந்தரி தன்சிரிப் பொன்றினால்!
கொய்மலர் மேனியை அள்ளிடுவான் அவள்
கோபுரத் தோளில் அழுந்துவாள்!
செய்வது யாதுபின்? இன்பநற் கேணியிற்
சேர்ந்தனர் தம்மை மறந்தனர்!
காதலர் இவ்விதம் இங்கிருந்தார் இதைக்
கண்டனர் கேட்டனர் ஊரினர்!
"ஏதுவிடோம என அத்தனை பேர்களும்
எட்டி நடந்தனர் சோலைக்கே.
பாதி மனிதர்கள் கோபத்திலே தங்கள்
பற்களை மென்றனர் பற்களால்!
மீதியிருந்தவர் கத்திநற் கேடயம்
வேலினைத் தூக்கி நடந்தனர்!
நின்றதோர் ஆல மரத்திடை வீழ்தினை
நேரிற் பிணைத்ததோர் ஊஞ்சலில்
குன்றுயர் தோளினன் வீற்றிருந்தான் அந்தக
கோல நிலாமுகப் பெண்ணுடன்!
சென்றனர் கண்டனர் காதலர் தங்களைச்
சீறினர்! பாய்ந்தனர் சிற்சிலர்!
கொன்று கிடத்திட வேண்டுமென் றேசிலர்
கோலையும் வேலையும் தூக்கினர்.
"பொய்தவிர் காதல்' எனப்படும் கம்பினில்
பூத்த அப்பூக்கள் இரண்டையும் கொய்து சிதைத்திட ஓடினர் சிற்சிலர்!
குன்றிட வைத்தனர் சிற்சிலர்
வையக மீதினில் தாலி யிழந்தவள்
மையல் அடைவது கூடுமோ?
துய்யம ணாளன் இறந்தபின் மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ?
என்றிவை கூறினர் ஊரினர் யாவரும்!
இங்கிவை கண்டனர் காதலர்
குன்றினைப் போல நிமிர்ந்தனர்! கண்ஒளி
கூர்ந்தனர்! அச்சம் தவிர்த்தனர்!
இன்றுள தேசம் புதுத்தேசம், மணம்
எங்களிஷ் டம்எனக் கூறியே
அன்னதோர் ஊஞ்சலை உந்தி உயர்ந்துயர்ந்து
ஆடினர்; ஊரினர் ஓடினர்!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
|
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 )
|
|
|
|