{ மகாவதி குண
மதா வேகமாய் என்ற -- மெட்டு }
{ தந்தை தனயனுக் குரைத்தல் }
கல்வி |
|
கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று
இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும் |
( 5 )
|
|
|
கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார்
என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை
|
( 10 )
|
|
|
இளமையிற் கல்லென இசைக்கும்
ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன் |
|
|
|
பிள்ளைக்கு நீதி
{ ஆனந்தக் களிப்பு மெட்டு } |
( 15 )
|
சோம்பிக் கிடப்பது தீமை -- நல்ல
தொண்டு செயாது கிடப்பவன் ஆமை!
தேம்பி அழும் பிள்ளைபோலே -- பிறர்
தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை |
( 20 )
|
புதுமையிலே விரைந்தோடு -- ஒன்று
போனவழிச் செல்லும் மந்தையில் ஆடு!
எதிலும் நிசத்தினைத் தேடு -- பொய்
எவர் சொன்ன போதிலும் நீ தள்ளிப்போடு
|
( 25 )
|
|
|
தேகத்திலே வலி வேற்று -- உன்
சித்தத்திலே வரும் அச்சத்தை மாற்று
ஊகத்திலே செயல் ஆற்று -- தினம்
உன்னருமைத் தமிழ் அன்னையைப் போற்று
|
|
|
|
பசிவந்த போதுண வுண்ணு -- நீ!
பாடிடும் பாட்டினி லே சுவை நண்ணு!
வசித்திடும் நாட்டினை எண்ணு -- மிக
வறியர்க்காம் உபகரணங்கள் பண்ணு
|
( 30 )
|
|
|
பொய்யுரைப் போன் பயங்காளி -- பிறர்
பூமி சுரண்டிடு வோன் பெருச்சாளி
வையக மக்கள் எல்லோரும் -- நலம்
வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி
|
|
வறுமையில் செம்மை
{ தாய் -- மகள் சம்பாஷணை }
சகானா ஆதி |
( 35 )
|
|
|
மகள் சொல்லுகிறாள்:
அம்மா என் காதுக்கொரு தோடு -- நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது -- நான்
சொல்லி விட்டேன் உனக்கிப்போது! (அம்) |
( 40 )
|
|
|
தாய் சொல்லுகிறாள்:
காதுக்குக் கம்மல் அழ கன்று -- நான்
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகு பணிவாய் -- நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய் (கா) |
( 45 )
|
|
|
மகள் மேலும் சொல்லுகிறாள்:
கைக் கிரண்டு வளையல் வீதம் -- நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல் லோரும் -- என்
பாடசாலையிற் சொல்ல நேரும்! (கைக்) |
( 50 )
|
|
|
தாய் சொல்லும் சமாதானம்:
வாரா விருந்து வந்த களையில் -- அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு -- பெண்ணே
அவர் சொல்வதுன் கைகட்கு விலங்கு! (வாரா) |
|
|
|
பின்னும் மகள்:
ஆபர ணங்கள் இல்லை யானால் -- என்னை
ஆர் மதிப்பர் தெருவில் போனால்
கோபமோ அம்மா இதைச் சொன்னால் -- என்
குறை தவிர்க்க முடியும் உன்னால் (ஆப) |
(55) |
|
|
அதற்குத் தாய்:
கற்பது பெண்க ளுக் கா பரணம் -- கொம்புக்
கல்வைத்த, நகை தீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு -- தன்
கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அன் போடு! (கற்) |
(60) |
|
|
மாணவருக்கு எழுச்சி
{ கல்யாணம் செய்துக்கோ என்ற மெட்டு }
நிற்கையில் நிமிர்ந்து நில்! -- ந
டப்பதில் மகிழ்ச்சி கொள்!
சற்றே தினந்தோறும் விளையாடு.
பற்பல பாட்டும் பாடிடப் பழகு! -- நீ
பணிவாகப் பேசுதல் உனக்கழகு! (நிற்)
|
(65)
(70) |
|
|
கற்பதில் முதன்மை கொள்
காண்பதைத் தெரிந்து கொள்
எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே!
சுற்றித் திரிந்திடும் துஷ்டர்! சிநேகிதம்
தொல்லை என்பதிலென்னசந்தேகம்? நீ (நிற்) |
(75) |
|
|
சித்திரம் பயின்று வா
தேன் போன்ற கதை சொல்
முத்தைப்போலே துவைத்த உடையணிவாய்
புத்தகம் உனக்குப் பூஷணம் அல்லவோ?
போக்கடிக்காதே இதை நான் சொல்லவோ -- நீ (நிற்) |
(80) |
|
|
பத்திரி கைபடி நீ
பலவும் அறிந்து கொள்
ஒத்துப் பிறர்க்கு நலம் உண்டாக்கு!
நித்தமும் இந்தத் தேசம் தன்னை
நினைத்துப் பொதுப் பணிசெய்
அவளுனக்கு அன்னை (நிற்)
|
(85) |
|
|
நல்லினஞ் சேர்தல்
{ பக்ஷமிருக்கவேணும் மன்னனே என்ற-மெட்டு }
சேரிடம் அறிந்துசேர் எந்நாளும் -- மைந்தா
தீயரை அணுகிடிற் பழி மூளும்!
சீரிய ஒழுக்கம் சிறந்தநூற் பழக்கம்
ஆரிடம் உள்ளதோ அன்னவரிடமே -- சினேகம்
ஆகுதல் அல்லவோடா உன் கடமை! |
(90)
(95)
|
|
|
மண்ணின்குணம் அங்குள்ள
நீருக்குண்டு -- மைந்தா
மாலையில் மலர்மணம் நாருக்குண்டு.
திண்ணம் பன்றி யொடும்
சேர்ந்த கன்றும் கெடும்!
கண்செய்த பாவம் தீயர் தமைக்காண்டல் -- மைந்தா
கைசெய்த புண்யம் நல்லார் அடி தீண்டல் |
(100) |
|
|
சடுதியிலே துஷ்டர் சகவாசம் --
பிராமண
சங்கடம் உணர் இந்த உபதேசம்.
தடையிதில் ஏது
தாய் எனக் கோது?
சுடுநெருப் பானவரின் குணம் தெரிந்து -- மைந்தா
சுப்புரத்தினம் சொல்லும் அமுதருந்து! (சேரிடம்)
|
(105) |
|
|
வழி நடத்தல்
{ சென்ற கனி பறித்துக்கொண்டு என்ற-மெட்டு }
மரங்கள் அடர்ந்திருக்குங் காடு -- கரு
வானில் உயர்ந்த மலை மேடு -- தம்மில்
பிரிந்து பிரிந்து செல்லும் வரியாய் -- நாம்
பிரியத்துடன் நடப்போம் விரைவாய்
பெருங் குரலில் பாட்டும்
பேச்சும் விளையாட்டும் -- நம்மை
விரைவில் அவ்விடம் கொண்டு கூட்டும்!
|
(110) |
|
|
இளமை தன்னில் வலிமை சேர்ப்போம் --
நாம்
எதிலும் தைரியத்தைக் காப்போம் -- நாம்
அளவில்லாத நாள் வாழ -- உடல்
அழகும் உறுதியு முண்டாக,
ஆசை கொண்டு நடப்போம்
அச்சமதைத் தொலைப்போம் -- நம்
நேசர் பலரும் மனங்களிப்போம். (மரங்கள்)
|
|