| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 103 |
Untitled Document
| 639 | | கண்ணப்பன் பூசைகொளும் கடவுள் திருக்கோயிலிலே, நண்ணக்கூடாதோ? நாங்கள் நடையில்வரல் ஆகாதோ? |
| 640 | | என்பினையும் தோலினையும் ஏந்துகின்ற சிவபெருமான் அன்பர்எமக் காலயத்தில் அருள்செய்ய மாட்டாரோ? |
| 641 | | சிலந்திக்கும் வரம்அளித்த சிவபெருமான் திருவடியை நலம்பெறவே கண்டுநாங்கள் நமக்கரித்தால் ஆகாதோ? |
| 642 | | பெற்றான்எனும் சாம்பானுக்குப் பேறளித்த பெருமானை வற்றாத அன்பொடு யாம் வணங்குதலும் வழுவாமோ? |
| 643 | | நந்தனுக்குப் பதமளித்த நடராசன் எங்களுக்கும் சொந்தம்எனக் கூறுவதில் சொல்லிழுக்கும் உண்டோ? ஐயா! |
| 644 | | நந்தனுக்குப் பதமளித்த நடராசன் கோயிலிலே வந்தனைகள் செந்துநாங்கள் வழிபடுதல் முறை அலவோ? |
| 645 | | பண்ணமையப் பாடிவந்த பறைச்சிக்கும் பரிசளித்த கண்ணபிரான் திருவடி யாம் கண்டுதொழல் ஆகாதோ? | |
|
|