Untitled Document
828 | | ஆயும் மேலதி காரிகள் வாழும்அக் கோயில் தோறுங்கை கூப்பித் தொழுதனன்; ஓயும் நெஞ்சுக் குறுதுசொல் வார்இலை; ஏயும் என்விதிக் கென்செய்கு வேன்? ஐயா! |
829 | | நெஞ்சில் நூலை நினைப்பது விட்டு, இனிப் பஞ்சின் நூலிற் பழகத் துணிகுவன்; கெஞ்சு வாழ்க்கையும் கேடும் ஒழியுமே; விஞ்சு செல்வமும் மேன்மையும் தங்குமே. |
| | 105. தீபாவளி | | | தொழிலாளி பாட்டு | 830 | | பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் - இந்தப் பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்; தண்டிகை மன்னவர், ஏழை எளியவர் சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம். |
831 | | ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! - அதை ஆண்டியும் கொண்டாட வேண்டாம், அடா! தீண்டு துயர்போகும் நாள் இதடா! - உள்ளம் தேடித் தவித்திடும் நாள் இதடா! |
832 | | உற்றார் உறவினர் யாவருமே - கூடி ஒன்றாக உண்டிடும் நாள் இதடா! வற்றாத செல்வம் படைத்தவர்போல - நாம் வாழ்வின் நலம்பெறும் நாள் இதடா! |
833 | | வாழத் தயங்கும் இக் காலத்திலே - துளி வாழ்வை அளித்திடும் நாள் இதடா! ஏழைக்கிரங்கி நரகாசுரன் - முன்னம் ஈசனை வேண்டிய நாள் இதடா! |
834 | | சென்றதை எண்ணி வருந்தாதேடா! - இனிச் சேர்வதும் எண்ணி நடுங்காதேடா! இன்றைக் கிருப்பதே உண்மை, அடா! - நாளை எப்படியோ? தெரி யாதோ, அடா! | |
|
|