Untitled Document 858 | | வேறுவேறு புண்ணியங்கள் செய்யவேண்டுமோ - கதர் வேட்டிவாங்கி அணிவது போதாதோ? ஐயா! நூறுபேருக் கன்னம்நிதம் அளித்தபலன் - இந்த நூலாடை கட்டுபவர்க் குண்டோ, ஐயா! |
| | 107. வட்ட மேசை மாநாடு | | | 'ஆண்டிப் பண்டாரம்' மெட்டு | 859 | | குறத்திப் பெண்ணேநீ - எனக்கோர் குறியுரைப்பாயோ? |
860 | | வட்டமேசை மகாநாடு மங்களமாய் முடிந்திடுமோ? திட்டமாகச் சுதந்திரத்தின் தீர்மானம் பழுத்திடுமோ? |
861 | | கற்றவர்கள் பெரியோர்கள் கப்பலேறிச் சென்றவர்கள் வெற்றிகொண்டு வருவாரோ? வெறுங்கையாய்த் திரும்புவரோ? |
862 | | இந்து மக்கள் மகமதியர் இணங்கிமனம் பொருந்துவரோ? பந்தமறக் கோட்டைக்குள்ளே படைகள் வெட்டி நிற்பாரோ? |
863 | | ஒட்டிவரும் இந்துமுஸ்லிம் ஒற்றுமை உறுதியாமோ? மொட்டைத்தலை குடுமியோடு முடிக்க முயன்றது வாமோ? |
864 | | மன்னவர்கள் இசைவாக வருவாரோ? மாறி அவர் தந்நயமே கருதிநம்மைத் தனி வழியே விடுவாரோ? |
865 | | தீதான அடிமைநிலை தீர்ந்திடவே நம்மவர்கள் வாதாடிச் செயிப்பாரோ? வாய்பேசா திருப்பாரோ? | |
|
|