முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 155 |
Untitled Document
1003 | | புண்ணியநாள் நாளெல்லாம் போற்றுநாள், செந் தமிழ்த்தாய் எண்ணியெதிர் பார்க்கும் இனியநாள், - மண்ணுலகில் மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள், ஆறுமுக நாவலர்கோன் தோன்றியநல் நாள். |
1004 | | ஆடும் தில்லை யம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன், பீடு பெறவே செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன், நீடு சைவம் இவ்வுலகில் நிலவச் செய்த குருநாதன், நாடு புகழும் ஆறுமுக நாவ லன்பேர் மறவோமே. |
1005 | | இல்லா ஏழை எளியவருக்கு இரங்கும் இனிய குணசீலன், கல்லா தவரின் கல்நெஞ்சும் கனியப் பேசும் கனிவுடையோன், வல்லா ரறிஞர் செல்வரறம் வளர்க்கும் ஈழ வளநாட்டன், நல்லார் போற்றும் ஆறுமுக நாவ லன்பேர் மறவோமே. |
129. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் |
1006 | | அந்தரத் தம்புலியும் ஆடரவும் சூடாமல் கந்தரத்து வெவ்விடமும் காட்டாமல் - வந்தருளும் அம்பல வாணன் அடிமலரைப் போற்றிநிதம் கும்பிடுநீ நெஞ்சே குழைந்து. | |
|
|