Untitled Document
1025 | | கண்டும் கனியும் கரும்பும் களியமுதும் தண்டமிழில் கொண்டுதரும் தண்ணளியான் - மண்டுபுகழ்ப் பண்டிதசுத் தானந்த பாரதிசெய் பாவிருந்தை உண்டறியார் உண்டோ? உரை. |
1026 | | முற்றத் துறந்த முனிவனை முத்தமிழும் கற்றுத் தெளிந்த கலைஞனை - உற்றநல் அன்புருவ மானசுத் தானந்த பாரதியை மன்புவியில் வாழ்த்துகவென் வாய். |
1027 | | கொண்டல் வண்ணா! கோபாலா! கும்பிட் டுன்னை வேண்டுகிறேன் அண்டு மன்பால் தமிழன்னைக்கு அல்லும் பகலும் அலுப்பின்றித் தொண்டும் செய்யும் தவயோகி சுத்தா னந்த பாரதியிம் மண்டலத்தில் என்றென்றும் வாழ வரம் நீ வழங்குவையே! |
1028 | | சிந்தை கனிந்திந்தச் சிறுகுடிலில் காட்சிதர வந்தருள்சுத் தானந்த மாமுனியே - வந்தனங்கள் ஆயிரம் செய்தேன், அரிய தமிழ்த்தெய்வக் கோயில்நீ என்றுளம் கொண்டு. |
1029 | | தண்டமிழ்த்தாய் தந்த தவயோக மெய்ஞ்ஞான பண்டிதசுத் தானந்த பாரதியே! - மண்டுபுகழ் இந்திய நாட்டில் இமய மலையேபோல் சந்ததம் வாழ்க தழைத்து. |
1030 | | எத்திசையும் கண்டுதொழ எங்கள் புதுவைவளர் சித்தன்யோ கீசன் திருவருளால் - நித்தமுமே அன்புருவ மானசுத் தானந்தப் பைங்கிளிநீ மன்புவியில் வாழ்க மகிழ்ந்து. | |
|
|