Untitled Document
1061 | | சீருயர் குணங்கள் வாய்ந்து சிறந்தமா தரசி யென்றித் தாரணி புகழும் செல்வி சகுந்தலை மனத்திற் கொண்ட நேரிய நினைப்பின் மாட்சி நிகழ்த்துமிந் நிலையம் வாழ வாரண முயர்த்த செவ்வேள் மலரடி வணங்கு வோமே. |
1062 | | பண்டைத் தமிழரின் பண்பாட்டை மக்களின்று கண்டறிய வந்த கலைக்கூடம் - மண்டுபுகழ் ஓங்குஎழும் தஞ்சை யுடையார் திருவருளைத் தாங்கிநிதம் வாழ்க தழைத்து. |
1063 | | முற்றா மதியை அழகுபெற முடியிற் சூடும் முதல்வாநின் பெற்றாள் மலரை அன்போடு புகழ்ந்து போற்றிப் பணிகின்றேன்; கற்றார் தஞ்சை மாநகரில் கண்ட கவினார் கலைக்கூடம் வற்றாப் பொன்னி நதிபோல வாழ வரம்நீ வழங்குவையே! |
1064 | | சீத மதிபுனையும் தேவாதி தேவாநின் பாதமலர் போற்றிப் பணிகின்றேன் - ஓதுபுகழ் செந்தமிழ்த் தஞ்சையிலிச் செல்வக் கலைக்கூடம் சந்ததமும் வாழவரம் தா. |
1065 | | கன்னல் ஒழுகும் இன்னிசையால் கண்ணைக் கவரும் அபிநயத்தால் பன்னற் கரிய அரங்கமைப்பால் பாரில் மக்கள் மகிழ்வடைய | |
|
|