Untitled Document
1072 | | சொல்லற் கரிய கலைவளரத் தொழில்கள் வளரப் பொருள்வளரத் தொல்லை தருநோய் அறநீங்கிச் சுகமாய் மக்கள் வாழ்ந்துவர நல்ல நல்ல நெறிகண்டெந் நாளும் போற்றிப் பணியாற்றி நெல்லை நகர சபையுலகில் நீடு வாழ்க வாழ்கவே! |
1073 | | அல்லும் பகலும் உழைத்திடுவோன் அன்பு கனிந்த உரைதருவோன் நெல்லை நகர சபைத்தலைவன் நேர்மை காணும் நெறியுடையான் நல்லன் நல்லா ரெல்லார்க்கும் நண்பன் ராம சாமிநிதம் முல்லை முதல்வன் துழாய்மார்பன் முகுந்தன் அருளால் வாழியவே! |
154. பாளையங்கோட்டை நகரசபை |
1074 | | தென்னாட்டில் கல்வியினால் செல்வம் தன்னால் சீருயர்ந்த நகரமென் றறிஞர் போற்றி முன்னாட்டுப் பாளையமா நகரை யாளும் முறைதேர்ந்த நகரசபைக் கினிது வாய்த்த சொன்னாட்டு வைரவிழாச் சிறப்புற் றோங்க, தொண்டருக்குத் தொண்டாற்றித் துணையாய் நிற்போன் மின்னாட்டு விரிசடையான் பாதப் போதை மெய்யன்போ டெப்போதும் வணங்கு வோமே! |
1075 | | பீட பெறவே நல்வாழ்வு பேணும் வழிகள் பலகண்டு பாடு பட்டுத் தளராது பணிகள் புரியும் சபையென்ன | |
|
|