முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 181 |
Untitled Document | | 178. கலைக்கதிர் | 1125 | | ஆதி பகவன் அறவாழி அந்தணன் யாதும் உவமையிலான் இன்னருளால் - கோதின்றிப் பல்லாண்டு வாழ்கவே பாரில் 'காலைக்கதிர்' நீ எல்லோரும் போற்ற இனிது. |
1126 | | ஆவித் துணையாய் அகிலமெலாம் காத்தருளும் தேவிமீ னாட்சி திருவருளால் - மேவுபுகழ்ச் செந்தமிழ் நாடு திருந்தக் 'காலைக்கதிர்' நீ வந்துநிதம் வாழ்க வளர்ந்து. |
| | வேறு | 1127 | | சிந்தைக் கினிய கட்டுரைகள் தேனார் கவிகள் கதைகளெலாம் சந்த முறவே தாங்கி நிதம் தமிழர் உள்ளம்மகிழ்வெய்த வந்து நிலவும் 'காலைக்கதிர்' நீ மயில்மீ தேறி விளையாடும் செந்தில் முருகன் திருவருளால் சிறந்து வாழ்க வாழ்கவே! |
1128 | | புண்ணியநாள் கண்டகதிர் பொங்கலொடு வந்தகதிர் கண்ணைக் கவரும் காலைக்கதிர் - எண்ணுமுளத் தையமெலாம் போக்கி அறிவுச் சுடர்பரப்பி வையமிசை வாழ்க வளர்ந்து. |
1129 | | அறிவுப் பணியால் அனைவருக்கும் நன்மை உரித்தாக பேரூக்கம் ஊட்டும் செறிவு மிளிர் செந்தமிழ் யாவர்க்கும் செப்புகின்றோம் நல்வாழ்த்தை எந்தமுளம் ஆர இயைந்து. |
| | 179. நவ இந்தியா | 1130 | | எவ்வுயிரும் எவ்வறமும் எக்கலையும் எத்தொழிலும் செவ்வையுறக் காத்தருளும் தெய்வமே - இவ்வுலகில் எத்திசையும் போற்ற நவஇந்தியா தொண்டாற்றி நித்தியமும் வாழவருள் நீ. | |
|
|