பக்கம் எண் :

186கவிமணியின் கவிதைகள்

Untitled Document
188. முரசொலி
1153 அன்பருளத் துண்மை அறிவாய் அமர்ந்தொளிரும்
தென்பழனி வேலன் திருவருளால் - இன்பமிகு
முத்தமிழ் நாட்டில் முரசொலிப் பத்திரிகை
நித்தமும் வாழ்க நிலைத்து.

189. தமிழ்த் தென்றல்
1154 ஐயம் நீங்கி உள்ளத்தில்
     அறிவின் அமுது ஊறியெழச்
செய்யும் கவிகள் கட்டுரைகள்
     சிறந்த கதைகள் பலதாங்கி
வையத் தன்பர் கண்டுமிக
     மகிழ வருமித் தமிழத் தென்றல்
தையல் பாகன் திருவருளால்
     தழைத்து வாழ்க வாழ்கவே

190. ஈழகேசரி
காந்திநெறி
1155 காந்திமகான் கற்பித்த கற்பனைகள் போலநமக்
காந்துணைவே றில்லை அறிவீரென் - றேந்துபுகழ்
முத்தமிழ்நா டெங்கும் முழங்குகீழ கேசரிநீ
நித்தமும் வாழ்க நிலைத்து.

செந்தமிழ்
1156 பாவணர் பாடிப் பரவும் கதிர்காமத்
தேவாதி தேவன் திருவருளால் - மூவாத
செந்தமிழைப் போற்றிச் சிறந்த ஈழ கேசரிநீ
சந்தமும் வாழ்க தழைத்து.

மெய்யறிவு
1157 ஆவித் துணையாய் அகிலமெலாம் காத்தருளும்
தேவிகுமரி திருவருளால் - ஆவலெழெ
மெய்யறிவைத் தந்து விளங்கீழ கேசரிநீ
வையமிசை வாழ்க வளர்த்து.