Untitled Document | | புத்தக வாழ்த்து (12) | | | 200. நாஞ்சில் வெண்பா | 1175 | | செந்தமிழ் நங்கை திரைகொண்ட செல்வம்கை வந்ததென உள்ளம் மகிழ்ந்தனளால் - முந்தும்என் நண்பா சிவராஜ நாவலா நின்னாஞ்சி வெண்பாவைக் கேட்டு வியந்து, |
1176 | | முன்னைய நாஞ்சி முதுமகள்இப் பாவணிந்த பின்னையொரு பேரிளம் பெண்ணானாள் - மன்னிரத வாதியரின் ஆய்ந்தகவி வாணர் பெரியரென்று ஓதுவதும் பொய்யுரையா மோ? |
| | 201. மகாகவி காளிதாசன் | 1177 | | ஞாலத்தில் அரியகவி காளிதாசன் நாகடத்தில் அரியதொரு நாடகத்தைச் சேலொத்த கண்ணிசகுந் தலையின் பேரால் தெய்வமொழி அணிபெறமுன் செய்தாஃதை மூலத்தின் உயிர்நாடி யெழுந்தெ முந்து மொழி பெயர்ப்பில் விசையோடு பேசுமாறின் பாலொத்த செய்தமிழின் சுத்தானந்த பாரத மெய்ஞ் ஞானியின்று பகர்ந்திட்டேனே. |
| | 202. செண்பகராமன் பள்ளு | 1178 | | வள்ளலுயர் தென்கோவை மன்செண் பகராமன் பள்ளினிமை யானும் பகருவதேன் - தெள்ளமுதப் பாட்டிசைக்கோர் பச்சைப் பசலையுமே சாய்ந்தாடிக் காட்டியதால் உள்ளக் களிப்பு. |
| | 203. மு. கதிரேசன் செட்டியார் | 1179 | | ஆரா வமுத மனைய தமிழுக்கோர் பேரா சிரியனெனப் பேர்பெற்றோன் - சீராரும் கண்ணுதலுக் கன்பன் கதிரேசன் என்றென்றும் மண்ணுலகில் வாழ்க மகிழ்ந்து. | |
|
|