முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 193 |
Untitled Document
1190 | | வங்க மகளின் திருமுகமாய் வாய்த்த காளி கட்டத்தில் பொங்கு புகழ்சேர் பாரதிபேர் போற்றி வளரும் தமிழ்ச்சங்கம் தங்கும் அன்பால் தந்தமலர் தரணிமீது வாடாமல் எங்கும் அறிவின் மணம்வீசி இனிது வாழ்க வாழ்கவே |
1191 | | சீருயர் காளிகட்டத் திருநகரில் வளரும் பாரதி தமிழ்ச்சங்கப் பைங்கொடி பூத்தமலர் சூரிய சந்திரர்கள் தோன்றிடு காலமெலா வாரிது சூழுகில் வாழுகவே. |
206. பூசைபிள்ளை காவடிச் சிந்து |
1192 | | ஈசன் குமரன் ஆறுமுகன் எமையாள் முருகன் திருவருளால் பாச பந்தம் அறநீங்கல் பரமானந்த நிலைகாணப் பூசைப் பிள்ளை செந்தமிழில் புனைந்த இனிய பாமாலை வசம் வீசி இவ்வுலகில் வாடா தென்றும் வாழ்கவே. |
1193 | | நாடும் அவதானியென நாடுபுகழ் ஆறுமுகன் பாடுங் குசேலவெண் பாவினிலே - பீடுபெறு செந்தமிழ்ச் செல்வி திருநடங் கண்டுநான் வந்தனம் செய்தேன் மகிழ்ந்து. |
1194 | | ஆரியத்தில் செந்தமிழில் ஆங்கி லத்தில் அரியபல நூல்கள் ஆய்ந்து கற்ற பேரறிஞர் எழுதுமெழுத் தோவி யங்கள் பெற்றபெரும் செல்வமெனப் பேணுமிந்தப் | |
|
|