முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 197 |
Untitled Document | | வந்த நினைவு மலரென்றும் வாடா மலராய் மணம்வீச அந்தி வண்ணா! பிறை சூடீ! ஆடும் பித்தா! அருள்கவே. |
1210 | | 'பாலும் பழமும் ஏனம்மா? பசியே இல்லை' எனக்கூறிச் சீலச் சிறுவர் சிறுமியர்கள் சிறந்த 'மலரும் உள்ள' மிதைக் காலை மாலை என்றென்றும், சுற்று மகிழச் செய்யுமிந்த ஜாலக் கவிஞன் வள்ளியப்பன் தழைத்து வாழ்க வாழ்கவே! |
1211 | | பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடிப் பாடி மகிழ்வெய்த, தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேனார் கவிகள் செய்துதரும் வள்ளி யப்பா! நின்னினய 'மலரும் உள்ளம்' என்றென்றும் புள்ளி மயில்வா கனனருளால் புவியில் வாழ்க! வாழ்கவே! |
1212 | | சின்னஞ் சிறுவர் சிறுமியர்க்குச் சிறந்த கருத்தைத் தெளிவாகக் கன்னல் செந்தேன் முக்கனிகள் கலந்த இனிய சுவையோடு மன்னும் கவிதை மணம்வீசி 'மலரும் உள்ளம்' என்றென்றும் பன்னற கரிய புகழ்பெற்றிப் பாரில் வாழ்க வாழ்கவே! | |
|
|