Untitled Document | | கண்ணிற் காணா விண்ணுலகம் கடந்து சென்றதேன்? அம்மா ! வண்ணக்கிளியே! மடமயிலே ! மாதர் மணியே! சகுந்தலையே! |
1283 | | காதல் முற்றி விளைந்துகனி கனியும் பருவத்து அம்மா! நின் சாதல் கண்ட துயரெமக்குத் தாங்கொ ணாத துயரேயாம்; ஈதல் ஓம்பும் இல்லறத்தின் இயல்பை எவர்க்கும் உணர்த்த வந்த கோதி லாத அரியகுலக் கொழுந்தே! தேவி சகுந்தலையே! |
1284 | | வையம் புகழும் காந்திமகான் வாழ்க்கைத் துணையாய் வாழ்ந்துநிதம் செய்யும் தொழில்கள் ஒவ்வொன்றும் திருத்தச் செய்து கண்கண்ட தெய்வம் கணவன் என்றுள்ளம் தெளிந்த தாயே நீயெம்மை வெய்ய துயரில் வீழ்த்தியின்று விண்ணா டாளச் சென்றனையே! |
241. மகாத்மா காந்தியடிகள் |
1285 | | திடம்படைத்த கல்நெஞ்சம் திடுக்கிட்டு நடுநடுங்கிச் சிதறிப் போக மடம்படைத்த மாபாவி வஞ்சனையால் காந்திமகான் மடியச் சுட்டான்; உடம்பனைத்தும் வாயாக அழுதாலும் உறுதுயரம் ஒழிந்தி டாதால்; இடம்படைத்த உலகாளும் இறையே நீ எங்கொழிந்தாய் இந்நாள் ஐயா! | |
|
|