பக்கம் எண் :

224கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பிறபாடல்கள் (15)

256. போற்றிக்கண்ணு

1330 நெஞ்செரிய வயிறேங்க நினைக்கும்போது
     நித்தி ரைகள் விட்டொழிய
வஞ்சஞ்செய் மாயாவி உருத்திராக்கம்
     வாங்கிவரம் பெற்றபணம் ஏப்பமிட்டாய்
மிஞ்சிவாழாய் மிரட்டிடுவாய் புரட்டி டுவாய்
     மீண்டிங்கே கால்தூ க்கவைக்க மாட்டாய்
சஞ்சலமே செய்திட வேசனித் திட்டாய்
     சா போற்றிக் கண்ணு நீயே

257. மந்தாரை மலர்

1331 மந்தாரை மலர்ந்திருக்க
     மதுவுண்ணும் வண்டெங்கே?
மாமுல்லைக் கொடிபடர,
     வளருங்கொள் கொம்பெங்கே?
சிந்தாத மணியிருக்க
     ஒளி யெங்கே சென்றதெனத்
தேரூரிற் பலர்கூடித்
     தெரிந்துகொளக் கேட்டதற்கு
நந்தாத பரஞான
     அமுதுண்டு தெவிட்டெறியும்
நற்பரமா னந்தனருள்
     பெறச் சென்ற நண்பா நீ
வந்தாலே மறுமொழியும்
     வகுப்பமெனச் சோதிடநூல்
வல்லாரும் கூறுகின்றார்
     வகையேதும் அறியேனே!

258. சிதம்பர கிருஷ்ண அய்யர்

1332 மன்னு மலையாள மடமானிளம்
     பயில்கரிய மாணிக்க நகரில் எதோ
தன்னைய வலைவீசி உட்புகும் தருணமதி
     தாபமுதல் சூழ்வ தாலோ