Untitled Document | | | கள்ளவிழும் வனத்திலெழும் இசையூ டெம்மை களிப்பொடுநீ வரவேற்கும் குறிப்கைக் கண்டேன் வள்ளலுன்றன் திருக்கழலின் ஒலிஎன் னுள்ளம் மலிய நிறைந் தானந்தம் அளிக்கு தையா! |
| 1337 | | ஆற்றங் கரையுண்டு, அழகான சோலையுண்டு; நந்த வனமுண்டு, நன்செய்கள் சூழவுண்டு; சத்திரங்கள் உண்டு, தமிழ்க் கல்விச் சாலையுண்டு; தெப்பக்குளமுண்டு, தேரோடும் வீதியுண்டு, மாளிகைகள் உண்டு, மடங்கள் பல உண்டு, நான்கு மதில்கள் உண்டு, நடுவிலொரு கோவிலுண்டு, கோபுர வாசலுண்டு, கொடிமரம் இரண்டுண்டு்; சித்திரையும் மார்கழியும், திருவிழாக் காட்சி உண்டு; பார்த்திடக் கண்கள் பதினாயிரம் வேண்டும்; தொன்னகரம் ஆன சுசிந்தைச் சிறப்பெல்லாம் என்னொரு நாவால் எடுத்துரைக்க ஏலாதே. |
| 1338 | | மாமதில் போல்மலை சூழும் நாடு - வளம் மாதமும் மாரி பொழியும் நாடு; பூமக ளின்முக மாகும் நாடு - சேரர் பொன்முடி சூடிப் புரக்கும் நாடு. | |
|
|