Untitled Document
| 60 | | விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொண்மின் பழையன திரிதலாய்ப் படித்துக் கொண்மின் புதியன புகுதலாய்ப் பொறுத்துக் கொண்மின். இன்னும், அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின். |
| 65 | | நாயேன் கொண்ட கருத்தைக் குறைவறக் கண்டு கொள்வது பெரியவர் கடனே. |
| | | 1. குலமுறை கிளத்து படலம் | 1391 | 68 | | என்கதை கேளும்! என்கதை கேளும்! இரக்க முள்ளோரே என்கதை கேளும்; |
| 70 | | நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே! நடுநிலை நீதி நடத்துமல்நல் லோரே! மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே! ஏழையென் துயரம் எல்லாம் கேளும். காசினி மீதென் கதைபோல் இல்லை |
| 75 | | சீதையின் கதையும் சிறுகதை யாகும் பாஞ்சா லியின்தை பழங்கதை யாகும்; தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம் கேளும்! கேளும்! என்கதை கேளும்! |
| 80 | | பதும நாபன் பாத பங்கயம் அணிமுடி யாக அணிதிரு மூல மன்னர் புரக்கும் வளமலி வஞ்சி நாட்டிற் சிறந்த நாஞ்சில் நாட்டில் தொல்லூ ராகும் நல்லுர ரதனில் |
| 85 | | மேழிச் செல்வம் விரும்பும்வே ளாளர் குலத்தில்ஓர் எளிய குடியிற் பிறந்தேன். தந்தைநோ யாளி, தாயுமோ ரேழை. அண்ணன் தம்பிகள் ஐவரும் மாண்டார். அக்காள் தங்கையும் இல்லை, அடுத்தவர் | | |
|
|