முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 243 |
Untitled Document
| | 3. கடலாடு படலம் | 1394 | | நேர்ந்த வெல்லாம் நெடுநா ளாகியும் |
| 265 | நெஞ்சைவிட் டின்னும் நீங்க வில்லையே! இவற்றை, இறந்து போகுநாள் அன்றி, இடையில் மறந்து போய்விட மருந்தும் இல்லையே? சென்ற |
| 270 | ஆடி மாதம் அமாவாசை யன்று குடும்பத் தோடு குமரித் துறையில் தீர்த்த மாடச் சென்று, நாங்கள் பட்ட பாடும் பரிசு கேடும் சொல்லி முடியுமோ ! சொல்லி முடியுமோ! |
| 275 | கரையில் தர்ப்பணக் கடனெலாம் முடித்து, நீரில் இறங்காது நின்றனர் கணவர், நின்றனர், நின்றனர், நெடிது நின்றனர். கண்டவர், 'இதற்கென் காரணம்' என்றனர். அவரும், |
| 280 | 'ஏக காலத் திவர்களை எல்லாம் அங்கை பிடித்துநீர் ஆடு தற்குநான் பன்னிரு கரத்தப் பரமன் அல்லவே, ஆயிரங் கரத்தவ் அண்ணலும் அல்லவே!' |
| 285 | என்று பலபல சொல்லி, இறுதியில் மணந்த முறையாய் மனைவிய ரெங்களைத் தனித்தனி யாகத் தடங்கை பற்றிக் கடல்நீ ராடினர். கதையிது பெரிதே! இங்ஙனம், |
| 290 | ஐந்து முறைநீ ராடிவந் ததனால், ஐயோ! அவரும் அறுபது நாள்விடாச் சுரத்தில் விழுந்து துன்பம் அடைந்தனர். அடையவே, ஏட்டைத் திருப்பித் திருப்பி யிருந்தும் |
| 295 | பாட்டைப் பாடிப் பாடி யிருந்தும், நாட்டு வைத்தியர் நாளைக் கடத்தினர். | | |
|
|