முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 245 |
Untitled Document
1395 | | | 5. பரிகலப் படலம் | | | ஐவரை மணந்தெம் கணவர் அடைந்த | 315 | | துயரெலாம் இங்கே சொல்லி முடியுமோ! இவரின் ஒருத்தியாய் எளியேன் அடைந்த குறையெலாம் இங்கே கூறி முடியுமோ! ஒருநாள் வெட்கம், வெட்கம், மிகவும் வெட்கம்! | 320 | | துக்கம் துக்கம் பெரிதும் துக்கம்! மனமும் நாணி வருந்துதே அம்மா! நாவும் குழறி நடுங்குதே அம்மா! எப்படிச் சொல்வேன்! யாவற் றிற்கும் என்தலை விதியை யன்றியிவ் வுலகில் | 325 | | எவரை நோக இடமுண் டம்மா! தீபா வளியோ திருக்கார்த் திகையோ, நன்றாய் எனக்கு ஞாபக மில்லை; வீட்டில் ஏதோ விசேஷ முண்டு; வீரவ நல்லூர் விருந்து முண்டு; | 330 | | பருப்பு முதலிய பற்பல கறிகள் வகைவகை யாக வைத்தது முண்டு. வந்த மனிதரும் எங்கள் மன்னரும் அமுது செய்துகை அலம்ப வெளியில் இறங்கினர். உடனே, எனக்கு முன்னால் | 335 | | வாழ்க்கைப் பட்ட மனைவிய ருக்குள் இழுப்பும் வலிப்பும் எதிர்ப்பும் வந்தன; அடியும் பிடியும் கடியு மாயின. மனிதப் பிறவியில் வந்தவரா மென்று எள்ளள வேனுமோர் எண்ண மிலாதவர் | 340 | | கொண்டை பற்றிச் சண்டை செய்தனர்! மண்டை ரத்தம் வடிய விட்டனர். என்னால் ஆன மட்டும் விலக்கினேன், அம்மா! ஆகா தாகா தென்றேன், அம்மா! | | |
|
|