Untitled Document | | | 6. நாகாஸ்திரப் படலம் | 1396 | | | இம்முறை யாக இருக்கும் காலம், எம் கணவரை ஒருநாள் மருமகன் கண்டு வழக்குப் பேச வந்தான் அம்மா! வந்தவன், | | 395 | | அம்மான் என்றோர் அடக்கமில் லாமல் மாமன் என்றோர் வணக்கமில் லாமல், கூறின மொழியெலாம் கூறுவேன், அம்மா! "ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு ஆயிரம் பணத்துக் கதிகம் வருமோ? | | 400 | | விளையை நிலமாய் வெட்டித் திருத்த பனையை விற்ற பணம் போதாதோ? கண்ணி யம்மை கலியா ணத்தில் கால்கா சுமக்குக் கைப்பொறுப் புண்டோ? மருமகள் என்றொரு மஞ்சா டிப்பொன் | | 405 | | குச்சா கிலும்நீர் கொடுத்ததும் உண்டோ? ஆண்டு தோறும் ஆதா யத்தில் ஆயிரம் ரூபாய்க் கையம் இல்லையே! ஏழாண் டாக இந்த மிச்சம் எங்கே போச்சுது? என்னடா, அப்பா! | | 410 | | கேட்பா ரில்லையோ, கேள்வியு மில்லையோ! நெட்டர மாவும் நெடுங்கண் வயலும் யாரிடம் கேட்டுநீர் ஈடு கொடுத்தீர்? கடனுக் கென்ன காரணம்? சொல்லும். ஊரில் காரிய விசாரம் உமக்கு | | 415 | | வேண்டாம் என்றேன்; 'விடுவனோ' என்றீர். கணக்கன் உமது கழுத்து முறிய எல்லாச் சுமைகளும் ஏற்றிவைத் ததனால், அம்மன் வகைக்கீ ராயிரம் ரூபாய் தெண்ட மிறுத்த கதைதெரி யாதோ? | | 420 | | உச்சிக் கொடைக்குப் பூச்சி வெள்ளையும் கொழுந்தும் தாழம் பூவும் கொண்டு | | |
|
|