Untitled Document | 455 | | இரவும் பகலும் இஷ்டம் போலத் திருடும் திறம்இச் சீமையில் எவருக்கு உண்டு? இதனை உணர்பவ ருண்டோ? கள்ளன் கஜானாக் காவலன் ஆனால், கொள்ள யடிப்பில் குறைவைப் பானோ? | | 460 | | செல்வ மெல்லாம் சிதையக் காரணம், சிறுவர் சோம்பித் திரியக் காரணம், மங்கையர் கண்ணீர் வடிக்கக் காரணம், வழக்குகள் மேன்மேல் வளரக் காரணம், குடும்ப நிலைமை குலையக் காரணம், | | 465 | | நாஞ்சில் நாட்டுக்கோர் நாச காரணம் எல்லாம் நீங்கள் என்றறிந் தல்லவோ காரண வர்எனும் காரணப் பெயரைத் தந்தனர் உமக்கும் அந்தக் காலமே. காரணத் தீனம் கடிய தீனம்; | | 470 | | கண்டூரத்தில் மருந்து கருத்தாய்க் கொடுத்தா லன்றிக் குணமா காது. போகர் மச்ச முனிபுலிப் பாணியர் கருணா னந்தர் கருவூர்த் தேவர் அகத்தியர் முதலிய ரிஷிகள் அனைவரும் | | 475 | | வைத்தியம் மந்திர வாதம் இவற்றைப் பாட்டுக் கணக்காய்ப் பாடி வைத்தனர்! ஏட்டுக் கணக்காய் எழுதி வைத்தனர்! இவரும், காரணத் தீனம் இன்னதென்று அறிந்தொரு குளிகை லேகியம் அல்லது | | 480 | | சூரணம் அதற்குச் சொன்ன தும் உண்டோ? அஷ்டாங் கிருத வைத்தியர், 'ஐயா எல்லாப் பிணியிலும் பொல்லாப் பிணியிது, எங்கள் நாட்டில் இப்பிணி யாலே வருந்தா திருக்கும் மனிதர் சிலரே; | | 485 | | இதுநாள் வரையும் இப்பிணி தீர, கஷாய மொன்று கண்டறிந் தவரிலை; |
| |
|
|