Untitled Document | 705 | | தாயப் போர்க்கொரு தடைசெய் யாமல், குடித்தன மில்லாக் குறிகள் அறிந்து, தடித்தன மில்லாச் சமயம் பார்த்து, 'அரசே! பெருந்திரு அமுதுக் காக இம்மா தத்துக்கு ஏற்படும் நெல்லிதை | | 710 | | அளந்து களஞ்சியத்து ஆக்கிடக் கற்பனை பாலித் தருள்வீர்' என்று பணிந்து நிற்கும் படிக்கு நீயும் 'கோர்ட்டு'த் தீர்ப்பைப் பெற்றுச் சீக்கிரம் வா, போ! உள்ளநா ளெல்லாம் உங்கட் காகநான் | | 715 | | உழைத்தது இந்த ஊர் அறியாதோ! பொண்டாட் டிக்கும் பிள்ளை கட்கும் இத்தனை நாளாய் எத்தனை கொடுத்தேன்? உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் கொடுத்தால் என்ன? குறைவாய் விடுமோ? | | 720 | | அடிமைகள் போல் இவர் அத்தனை வேலையும் செய்வதும் உனக்குத் தெரியா தோடா? 'வயலைப் பார்த்து வா'எனில், 'கிழட்டுப் பயலே! உனக்குப் பயித்தியம்' என்பாய்! 'கொத்தை அளந்து கொடு' என்றால் 'நீ | | 725 | | வைத்த ஆளோ? மாட்டேன்' என்பாய்! போன பூவில் புளியடிச் சூடு வட்டம் தள்ளி வரும்போது உன்னிடம் 'களத்தில் சென்று கண்காணி' என்றேன்; அந்தப் படியே அவ்விடம் சென்றுநீ | | 730 | | நிமிஷப் பொழுதில் நெல்அரைக் கோட்டை கடத்தி விட்ட கதையும் எனக்குத் தெரியா தோடா? திருட்டுப் பயலே! மறுநாள், விடியற் காலம் விசாரிப்புக் காரன் சாக்கும் இருபதாம் நம்பர் 'ஷாப்பில்' இருந்தது கண்டுவந்து என்னிடம் சொன்னான்; |
| |
|
|